கடந்த சில வாரங்களுக்கு முன்பு இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் மாமன்னன் . இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் உடன் இணைந்து வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர். இப்படி வெளியான திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றிப்படமாக அமைந்துள்ளது .
அதுவும் இந்த படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது என்று தான் சொல்ல வேண்டும் .அப்படி அதுவரை காமெடி நடிகராக பார்த்து வந்த வடிவேலு இந்த படத்தில் தன்னுடைய தரமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.இதனால் வடிவேலுவுக்கு இந்த படத்திற்காக தேசிய விருது கூட கிடைக்கலாம்,
என்று பலரும் கூறி வருகின்றனர் . இப்படி வடிவேலுவுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை பெற்றுத்தந்த மாமன்னன் படத்தில் முதலில் நடிக்க இருந்தது வேறொரு நடிகர் தானாம். அவர் வேறு யாருமில்லை நடிகர் சார்லி தான் .ஆரம்பத்தில் காமெடி நடிகராக கலக்கி கொண்டு வந்த சார்லி தற்போது படங்களில் ,
குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துக் கொண்டு வருகிறார். மேலும் இந்த படத்தின் கதையை எழுதும் போது இந்த கதாபாத்திரத்திற்கு சார்லி தான் பொருத்தமாக இருப்பார் என்று முடிவெடுத்தாராம் மாரி செல்வராஜ். இதன் பிறகு எதற்கும் வடிவேலுவிடம் ஒரு வார்த்தை கேட்டு பார்க்கலாம், அவர் ஒத்துக் கொள்ளவில்லை,
என்றால் சார்லியை நடிக்க வைக்கலாம் என்று முடிவெடுத்துள்ளனர் . ஆனால் உதயநிதி ஸ்டாலினின் படம் என்பதால் உடனே ஓகே சொல்லி விட்டாராம் வடிவேலு. இருந்தாலும் சார்லி மாமன்னனாக நடித்திருந்தால் அவரும் தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது …