தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக் கொண்டு வருபவர் தான் நடிகர் சிம்பு. தற்போது 40 வயதாகும் சிம்பு இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். அது மட்டுமல்லாமல் ஆரம்பத்தில் பல நடிகைகளை காதலித்து வந்தார் சிம்பு . இந்நிலையில் அவர்கள் பிரிந்து சென்றதற்கான காரணம் வெளியாகியுள்ளது . அந்த வகையில் சிம்பு இயக்கி நடித்திருந்த வல்லவன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடித்திருந்தார் . இந்த படத்தின் போதே ,
இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது . அது மட்டுமல்லாமல் இவர்களின் நெருக்கமான புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பின்னர் இவர்களுடைய காதல் ரொம்ப நாட்கள் நீடிக்கவில்லையாம் . இதன்பிறகு சிம்புவை பிரிந்து விட்டார் நடிகை நயன்தாரா .
இவரைத் தொடர்ந்து வாலு படத்தின் போது ஹன்சிகா இவர் மீது காதல் வயப்பட்டார் . ஆனால் இவர்களுடைய காதலும் திருமணம் வரை வந்து பாதியிலேயே பிரிந்து விட்டார்களாம் . இந்த இரண்டு காதல் தோல்விகளால் தற்போது தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருந்து வருகிறார் நடிகர் சிம்பு . இந்நிலையில் பேட்டி ஒன்றில்,
பேசிய சிம்பு நம்முடைய வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை, நேற்று நான் வேறொரு வண்டி வச்சு இருந்தேன், இன்னைக்கு புது வண்டி வைத்திருக்கிறேன். யாருமே நம்ம கூட இருக்க போறது கிடையாது, நாம மட்டும் தான் கடைசியா நம்ம கூட இருப்போம் என்று கூறியிருந்தார் . அப்படி ஒருவர் நம்மை பிடிக்கவில்லை,
என்று சொல்லிவிட்டால் அவரை திரும்ப தொந்தரவு செய்யாமல் இருப்பது தான் நல்லது என்று சிம்பு முடிவெடுத்துள்ளா ராம் . இதனால் தான் நயன்தாரா, ஹன்சிகா பிரியும் போது சிம்பு எதுவும் சொல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தான் தற்போது வரை இவர் சிங்கிளாக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது…