தமிழ் திரையுலகில் பிரம்மாண்ட இயக்குனர் என்று பெயர் எடுத்தவர் இயக்குனர் ஷங்கர். அப்படி ஜென்டில்மேன் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய ஷங்கர் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறார் . இருந்தாலும் இயக்குனர் ஷங்கர் வரலாற்று கதைக்களங்களை இதுவரை எடுத்ததே கிடையாது . ஆனால் இயக்குனர் ஷங்கர் வரலாற்று கதைகளை ,
எடுக்க வேண்டும் என்பது ரசிகர்களின் நீண்ட நாள் கனவாக இருந்து வந்தது. அதை தற்போது நிறைவேற்றியுள்ளார் இயக்குனர் ஷங்கர் . அந்த வகையில் பொன்னியின் செல்வன் நாவலை போல எல்லோருக்கும் பிடித்த நாவல்களில் ஒன்றுதான் வேள்பாரி . இந்த நாவலை படமாக,
எடுப்பதற்கு திட்டமிட்டுள்ளாராம் இயக்குனர் ஷங்கர் . அப்படி ஆயிரம் கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தில் ரன்வீர் சிங் , யாஷ் போன்ற மற்ற மாநில நடிகர்கள் நடிப்பு இருந்ததாக தகவல் வெளியானது . ஆனால் தமிழ் பாரம்பரிய வரலாற்று கதைக்களம்,
என்பதால் இதில் தமிழ் நடிகரே நடித்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணி சூர்யாவை களத்தில் இறக்கியுள்ளாராம் இயக்குனர் ஷங்கர் . குறிப்பாக சூர்யாவுடன் பணிபுரிய வேண்டும் என்பது ஷங்கருக்கு நீண்ட நாள் ஆசையாம். அது மட்டுமல்லாமல்,
தற்போது கங்குவா என்ற வரலாற்று கதை களத்தில் சூர்யா பிரமாதமாக நடித்து வருவதால் அவரையே இந்த படத்தில் வேள்பாரியாக நடிக்க வைப்பதாக கூறப்படுகிறது . இதை பார்த்த ரசிகர்கள் அப்ப மிகப்பெரிய சம்பவம் இருக்கு என்று கூறி வருகின்றனர்…