May 2, 2024

முதலாம் ஆண்டு திருமண நாளில் ..!! கணவருடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படங்களை பகிர்ந்த ” பாக்கியலட்சுமி ” சீரியல் ரித்திகா ..!!

தற்போது சினிமா நடிகைகளுக்கு இருக்கும் வரவேற்பு சீரியல் நடிகைகளுக்கும் இருக்கிறது.  அப்படி தொலைக்காட்சி சீரியல்களில் நடிக்கும் நடிகைகளும் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமாகி வருகின்றனர். அதில் ஒருவர் தான் நடிகை ரித்திகா தமிழ்ச்செல்வி  கடந்த 2018 ஆம் ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் அறிமுகமானார் ரித்திகா தமிழ் செல்வி .

பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து சிவா மனசுல சக்தி ,சாக்லேட் ,திருமகள் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார்.  இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தான்.  இந்த நிகழ்ச்சி இவரை பட்டி தொட்டி எங்கும்,

பிரபலமாக்கியது.  பின்னர் இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து காமெடி ராஜா கலக்கல் ராணி , ராஜூ ஊட்டுல பார்ட்டி போன்ற நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று இருந்தார் ரித்திகா.  இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போது வினு என்பவரை கடந்த வருடம் திருமணம் செய்து கொண்டார்.  இப்படி இருக்கும் நிலையில்,

இவர்கள் இருவருக்கும் திருமணமாகி ஒரு வருடங்கள் ஆன நிலையில் கணவருடன் எடுத்த ரொமான்டிக் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் ரித்திகா.  இதை பார்த்த ரசிகர்கள் ரித்திகாவுக்கும் , அவருடைய கணவருக்கும் திருமணநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *