தற்போது தமிழ் சினிமா உலகில் சத்தமே இல்லாமல் பல மொழி படங்களிலும் கலக்கி கொண்டு வருகிறார் நடிகர் தனுஷ் . இதற்கு காரணம் இவருடைய விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் தான் . அப்படி அவர் நடிக்க வந்த புதிதில் யார் யார் இவரை விமர்சனம் செய்தார்களோ அவர்கள் வாயாலேயே சிறந்த நடிகர் என்று சொல்ல வைத்தார் நடிகர் தனுஷ். இப்படி சினிமா வாழ்க்கையில்,
கொடி கட்டி பறந்து வரும் தனுஷ் சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்து வருகிறார் என்பது பலருக்கும் தெரிந்த ஒன்றுதான் . அந்த வகையில் கடந்த 2004 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொண்டார் நடிகர் தனுஷ்.
திருமணமான இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர் . குறிப்பாக திருமணமாகி பதினெட்டு வருடங்கள் வாழ்க்கை நடத்தி வந்த தனுஷும், ஐஸ்வர்யாவும் கடந்த வருடம் திடீரென பிரிவதாக அறிவித்திருந்தனர். இதன்பிறகு தான் நடிகர் தனுசுக்கு அடி மேல் அடி விழுந்தது .
இப்படி இருக்கும் நிலையில் விவாகரத்து ஆனதிலிருந்து சந்தோஷம் இல்லாமல் இருந்து வந்த தனுஷ் தற்போது தன்னுடைய சந்தோஷத்திற்காக கோடி கோடியாய் செலவு செய்துள்ளாராம். அந்த வகையில் சமீபத்தில் தன்னுடைய பள்ளி நண்பர்களை சந்தித்து இருந்தார் நடிகர் தனுஷ். அப்படி தன்னுடைய ,
நண்பர்களை சந்தித்தது மட்டுமில்லாமல் அதற்கான செலவையும் அவரே பார்த்துக் கொண்டாராம் . அந்த நிகழ்ச்சி பெரிய ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்ற தாம் . அப்படி அவருடைய பழைய நண்பர்களை சந்தித்த பிறகு தான் தனுஷுக்கு ஒரு தெளிவு கிடைத்ததாக கூறப்படுகிறது…