தமிழ் சினிமாவை கலக்கி வந்த பிரபல துணை காமெடி நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் போண்டாமணி. இலங்கையை சேர்ந்த போண்டாமணி தமிழ் படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்தார் . இன்னும் சொல்லப்போனால் இவர் அதிகம் வடிவேலுவுடன் தான் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . அந்த வகையில் இவர்கள் இருவரும் ஒன்றாக நடித்திருந்த,
“உனக்கு வந்தா ரத்தம் , எனக்கு வந்தா தக்காளி சட்னியா”, “அடிச்சும் கேப்பாங்க , அப்பவும் சொல்லிடாதீங்க” போன்ற காமெடி காட்சிகள் இப்போதும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது. இப்படி வடிவேலுவின் காமெடிக்கு உறுதுணையாக இருந்த ,
நடிகர் போண்டாமணி உடல் நலம் சரியில்லாமல் தவித்த போது உதவி செய்கிறேன் , உதவி செய்கிறேன் என்று சொல்லிவிட்டு ஒண்ணுமே செய்யாமல் இருந்திருக்கிறார் வடிவேலு . இப்படி இருந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென மயங்கி விழுந்து இறந்துவிட்டார்,
நடிகர் போண்டாமணி . என்னதான் கஷ்டத்தில் உதவவில்லை என்றாலும் தன்னுடன் பயணித்த நபர் என்ற அக்கறையிலாவது நடிகர் போண்டாமணியின் இறப்பிற்கு வடிவேலு போயிருக்கலாம். ஆனால் அவருடைய இறப்பிற்கும் கூட வடிவேலு போகவில்லையாம்.
இதைப் பார்த்த ரசிகர்கள் வடிவேலு இவ்வளவு சுயநலம் பிடித்தவரா என்று கூறி வருகின்றனர். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …