தமிழ் சினிமா உலகில் முக்கிய ஜாம்பவான்களாக இருந்து வருபவர்கள் ரஜினி மற்றும் கமல் . சினிமாவை தாண்டி நல்ல நண்பர்களாக இருந்து வரும் ரஜினிக்கும் இரண்டு மகள்கள், கமல்ஹாசனுக்கும் இரண்டு மகள்கள் உள்ளனர் . இதில் இவர்கள் இருவருக்கும் உள்ள வித்தியாசம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது . அந்த வகையில் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதிஹாசன் அப்பாவின் தயவில்லாமல் தான்,
சினிமாவில் தனக்கான இடத்தை பிடித்துக் கொண்டார் . இன்னும் சொல்லப்போனால் அப்பாவின் சொத்தே வேண்டாம் என்று தான் சம்பாதித்த பணத்தில் வாழ்ந்து வருகிறார். இவரைத் தொடர்ந்து கமல்ஹாசனின் இரண்டாவது மகள் சினிமாவில் தனக்கான இடத்தை பிடிக்க முடியாமல் தடுமாறி வருகிறார் .
அப்படி இருந்தும் கூட இவர்கள் இருவருமே அவருடைய அப்பாவின் உதவியை நாடவில்லை. ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகள்கள் இவர்களுக்கு நேர் எதிர் . அந்த வகையில் சூப்பர் ஸ்டாரின் இளைய மகளான சௌந்தர்யா கோச்சடையான் என்ற படத்தை இயக்கியிருந்தார் . இந்த படத்தால்,
பல கோடிகளை இழந்தார் ரஜினிகாந்த். இவரைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்காக தற்போது லால் சலாம் படத்தில் சிறப்பு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அது மட்டுமில்லாமல் சௌந்தர்யா ஐஸ்வர்யா இருவருக்குமே அவர்க ளுடைய முதல் திருமண வாழ்க்கை ,
ரொம்ப காலம் நீடிக்கவில்லை . இதில் சௌந்தர்யா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஐஸ்வர்யா விவாகரத்தானதிலிருந்து சிங்கிளாக தான் இருந்து வருகிறாராம் . இதனால் கமலை விட மகள்களை நினைத்து நாளுக்கு நாள் வேதனையை அனுபவித்து வருகிறாராம் சூப்பர் ஸ்டார் அவர்கள்…