தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகர்களில் ஒருவர் தான் நடிகர் சிம்பு . இயக்குனரும் , நடிகருமான டி. ராஜேந்தரின் மூத்த மகனான சிம்பு ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த வந்தார். பின்னர் காதல் அழிவதில்லை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் நடிகர் சிம்பு . இதன் பிறகு பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை ,
பிடித்துக் கொண்டார் நடிகர் சிம்பு . இப்படி இருக்கும் நிலையில் சிம்பு என்றாலே வம்பு என்று சொல்வதை போல , அவரை வைத்து படம் எடுப்பதற்கே பல தயாரிப்பாளர்கள் தயங்கியுள்ளனர் . காரணம் சிம்பு படப்பிடிப்பிற்கு சரியான நேரத்துக்கு வர மாட்டார்.
பேசிய சம்பளத்தை விட அதிக சம்பளத்தை கேட்பார் என்று அடுக்கடுக்காக பல புகார்கள் கூறப்பட்டது. ஆனால் அதெல்லாம் உண்மை கிடையாதாம். அந்த வகையில் சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான மாநாடு படத்துக்கு வெறும் எட்டு கோடி சம்பளம் ,
வாங்கினாராம் நடிகர் சிம்பு . ஆனால் இதன் பிறகு தன்னுடைய சம்பளத்தை சிம்பு 25 கோடி ஏற்றியதாக கூறப்படுகிறது. ஆனால் உண்மையில் சிம்புக்கு பணத்தாசை என்பதே கிடையாதாம் . அவருடைய அப்பா, அம்மா தான் இவருடைய சம்பளத்தை அதிகமாக,
கேட்கிறார்களாம் . இதனால் தான் இவருடைய பெயர் கெட்டுப் போனதாக கூறப்ப டுகிறது.அப்படி இருந்தும் கூட இதை எதையும் கண்டுக்கொள்ளாமல் ரசிகர்களுக்காக அடுத்தடுத்து பல திரைப்படங்களில் நடித்துக்கொண்டு வருகிறார் நடிகர் சிம்பு …