தற்போது தென்னிந்திய சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஹன்சிகா மோத்வானி . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமான ஹன்சிகா தெலுங்கு படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . இதன் பிறகு தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து எங்கேயும் காதல்,
வேலாயுதம் ,சிங்கம் 2 ,மான் கராத்தே போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் நடிகை ஹன்சிகா . குறிப்பாக இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் .இப்படி தொடர்ந்து நடித்து வந்த ஹன்சிகா கடந்த வருடம் அவருடைய நீண்ட நாள்,
நண்பரான சோஹைல் கத்தூரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார் . திருமணத்திற்கு பிறகு தற்போது ஐந்து திரைப்படங்களுக்கு மேல் கைவசம் வைத்திருக்கிறார் நடிகை ஸ்ருதிஹாசன் இப்படி இருக்கும் நிலையில்இவர் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி கிட்டத்தட்ட ,12 வருடங்கள் ஆகியும் இவருக்கு ,
அந்த விஷயம் சுத்தமாக தெரியாதாம் . அந்த வகையில் ஹன்சிகா தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி 12 வருடங்கள் ஆகிறது , இருந்தாலும் இவருக்கு சரளமாக தமிழ் பேச தெரியாதாம் . இன்னும் சொல்லப்போனால் இவர் படப்பிடிப்பில் தமிழில் பேசினால் எல்லோரும் சிரிக்கிறார்களாம் . இதனாலேயே அவமானம் ,
தாங்க முடியாமல் படப்பிடிப்பில் தமிழில் பேசுவதையே நிறுத்திக் கொண்டாராம் ஹன்சிகா . இயக்குனர் சொல்லும் வசனத்தை மட்டும் தான் பேசுவாராம், மத்தபடி ஒரு வார்த்தை கூட வாய் திறக்க மாட்டாராம். இந்த விஷயத்தை சமீபத்தை பேட்டி ஒன்றில் ஹன்சிகாவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது ….