90 களின் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த நடிகைகளில் ஒருவர் தான் மறைந்த நடிகை சௌந்தர்யா . கடந்த 1993 ஆம் ஆண்டு வெளியான பொன்னுமணி என்ற படத்தில் மூலம் அறிமுகமான சௌந்தர்யா தொடர்ந்து அருணாச்சலம் ,காதலா காதலா ,படையப்பா ,தவசி போன்ற பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் . இப்படி தவிர்க்க முடியாத நடிகையாக இருந்து வந்த சௌந்தர்யா கடந்த 2004 ஆம் ஆண்டு விமான விபத்தில் ,
உயிரிழந்து விட்டார். இப்படி இருக்கும் நிலையில் நடிகை சௌந்தர்யாவின் வாழ்க்கை வரலாற்றில் நான்தான் நடிப்பேன் என்று ஒற்றைக்காலில் நிற்கிறார் பிரபல நடிகை ஒருவர் . அவர் வேறு யாரும் இல்லை நடிகை ராஷ்மிகா தான். மேலும் ராஷ்மிகா பார்ப்பதற்கு சௌந்தர்யா போல,
இருப்பதாக அடிக்கடி அவருடைய அப்பா கூறுவாராம். அதனால் எப்படியாவது அவருடைய வாழ்க்கை வரலாற்றில் நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதாக கூறியிருந்தார் நடிகை ராஷ்மிகா . இதை பார்த்த ரசிகர்கள் அய்யோ இவரா வேண்டவே வேண்டாம் என்று கதறி வருகின்றனர்…