April 29, 2024

நயன் தாரா வின் மகன் களு க்கு நா ன் தா ன் தாய் மாமன் ..!! உரிமை யாக சொல் லும் பிரப ல நடி கர் ..!! நயன் தா ரா இவரு க்கு கூட பி றக் காத தங் கச்சி யா ..?? நடி கரே கூ றிய தக வ ல் ..!!

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை நயன்தாரா.  அப்படி தமிழ் ரசிகர்களால் லேடி சூப்பர் ஸ்டார் என்று கொண்டாடப்பட்டு வரும் நயன்தாரா கடந்த வருடம் இயக்குனர் விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார் . திருமணமான ஒரு சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டை குழந்தைகளையும் பெற்றுக் கொண்டார் நடிகை நயன்தாரா .

இத்தனை நாட்களாக தன்னுடைய மகன்களை வெளியில் காட்டாமல் இருந்து வந்த நயந்தாரா சமீபத்தில் தான் அவர்களுடைய புகைப்படத்தை வெளியிட்டு இருந்தார்.  இப்படி இருக்கும் நிலையில் நயன்தாராவின் மகன்களுக்கு நான் தான் தாய் மாமன் என்று வெளிப்படையாக கூறியுள்ளார் பிரபல நடிகர் ஒருவர்.

அவர் வேறு யாருமில்லை நடிகர் சந்தானம் தான் . காமெடி நடிகராக அறிமுகமாகி இன்று ஹீரோவாக கலக்கிக் கொண்டு வருகிறார் நடிகர் சந்தானம்.  அப்படி சந்தானம் நயன்தாராவுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார் . இந் நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய,

சந்தானம் நயன்தாராவை பற்றி பேசி இருந்தார்.   அதில் அவர் கூறியதாவது,  நயன்தாரா என்னை அண்ணா என்று தான் அழைப்பார் . வல்லவன் படத்தில் இருந்து தான் நயன்தாராவை எனக்கு தெரியும் . இதன் பிறகு பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தின் போது தான் நாங்கள் இருவரும் ஒரு அண்ணன் தங்கை போல பழகி வந்தோம்.

இதனால் நயன்தாராவை என் கூட பிறக்காத தங்கச்சியாகவே நான் பார்க்கிறேன் . அது மட்டுமல்லாமல் அவருடைய வீட்டிற்கு சென்ற போது அவருடைய பசங்களை என்னுடைய மடியில் உட்கார வைத்து தான் காது குத்த வேண்டும்,  தாய் மாமன் சீர் நான்தான் செய்வேன் என்று சொல்லியதாக கூறியிருந்தார்  சந்தானம்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *