தற்போது தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன் . மேலும் இவர் இந்த அளவிற்கு உயர்ந்ததற்கு காரணம் நடிகர் தனுஷ் என்று தான் சொல்ல வேண்டும் . காரணம் சிவகார்த்திகேயனை வைத்து எதிர்நீச்சல் என்ற திரைப்படத்தை நம்பி தயாரித்திருந்தார் தனுஷ் . இந்த திரைப்படம் ஏகபோக வரவேற்பை பெற்றது .
இதன் பிறகு தான் சிவகார்த்திகேயன் பிரபல நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றார் . இதன் பிறகு நல்ல நண்பர்களாக பழகி வந்த இருவருக்கும் இடையே திடீரென மனஸ்தாபம் ஏற்பட்டு பேசுவதில்லை என்று தகவல் வெளியானது. இப்படி இருக்கும் நிலையில் தற்போது மாவீரன் என்ற படத்தில்,
நடித்து முடித்திருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் சிவகார்த்திகேயன் , அதிதி ஷங்கர் , மிஸ்கின் , சரிதா, சுனில் போன்ற பல பிரபலங்கள் நடித்துள்ளனர் . மேலும் இந்த படத்தில் இயற்கைக்கு எதிரான ஒரு குரல் கேட்கும்படியான விஷயம் உள்ளதாம் . இதற்காக ரஜினி, கமல் போன்ற ,
மூத்த நடிகர்களை படக்குழுவினர் அணுகியுள்ளனர் . ஆனால் ரஜினி, கமல் இருவருமே முடியாது என்று சொல்லி மறுத்து விட்டார்களாம் . இதன்பிறகு தனுஷிடம் கேட்டிருக்கின்றனர். ஆனால் பழைய பகை எல்லாம் மறந்து சிவகார்த்திகேயனுக்காக இந்த படத்தில் ,
குரல் கொடுப்பதற்கு சம்மதித்துள்ளாராம் நடிகர் தனுஷ் . இதனால் இவர்கள் இருவருக்கும் இடையே இருக்கும் மனஸ்தாபங்கள் விலக உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதை பார்த்த ரசிகர்கள் தனுஷின் மனசு யாருக்கும் வராது என்று கூறி வருகின்றனர்…