அரவிந்த்சாமி ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகர் மற்றும் தொழிலதிபராவார் . கடந்த 1991 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தளபதி என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார் அரவிந்த்சாமி . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து வெளியான ரோஜா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அரவிந்த்சாமி . இதன் பிறகு மறுபடியும் , தாலாட்டு,
பாசமலர்கள் ,டூயட் ,பாம்பே, இந்திரா ,மின்சார கனவு போன்ற பல திரைப்படங்களில் நடித்து பிரபலமானார் நடிகர் அரவிந்த்சாமி. அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி தொடர்ந்து ,
நடித்து வந்த நடிகர் அரவிந்த்சாமி சினிமாவை விட தன்னுடைய தொழிலில் தான் அதிக வருமானம் ஈட்டி வருகிறாராம் . அந்த வகையில் அரவிந்த்சாமியின் மொத்த சொத்து மதிப்பு 400 கோடி சொத்து மதிப்பு வைத்திருக்கும் ரஜினி , விஜய் விட அதிகம் என்று தகவல் வெளியாகி உள்ளது .
அந்த வகையில் அரவிந்த்சாமி டேலண்ட் மேக்ஸிமஸ் என்ற கம்பெனியை நடத்தி வருகிறாராம் அரவிந்த்சாமி. இந்த கம்பெனியின் மொத்த சொத்து மதிப்பு 3000 கோடிக்கு மேல் இருக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் அரவிந்த்சாமி சினிமாவில் சேர்த்து வைத்த,
சொத்து மதிப்பு வெறும் பத்து கோடி தான் இருக்கும் என்று கூறப்படுகிறது . இதனால் தான் சமீப காலமாக சினிமாவை விட தொழிலில் அதிக கவனம் செலுத்தி வருகிறார் என்று கூறப்படுகிறது. இதை பார்த்த ரசிகர்கள் இத்தனை கோடி சொத்தா என்று கூறிவருகின்றனர் …