தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் பல பிரபலங்களை தூக்கி விட்டு அழகு பார்த்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் . ஆனால் பாரபட்சம் பார்க்காமல் எத்தனையோ பேரை தூக்கி விட்ட விஜயகாந்தின் மகன்களை தூக்கி விட ஒருத்தர் கூட முன் வரவில்லை என்பதுதான் சோகமான விஷயமே . இப்படி இருக்கும் நிலையில் கேப்டன் விஜயகாந்த் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் கூட்டத்தை நடிகர் சங்கம் சமீபத்தில் நடத்தியது .
இதில் குறிப்பிட்ட நடிகர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். அந்த வகையில் நடிகர் சங்கத்தில் முக்கிய பொறுப்பில் இருக்கும் விஷாலும் கலந்து கொண்டார் . அப்போது பேசிய விஷால் அண்ணன் விஜயகாந்த் சினிமாவில் பலரையும் தூக்கி விட்டு அழகு பார்த்தார் . அதனால் நான்,
அண்ணன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியனிடம் ஒன்று சொல்லிக் கொள்கிறேன் . அதாவது நான் சண்முக பாண்டியன் படத்தில் நடிப்பதற்கு ஆசைப்படுகிறேன் . இவரை எப்படியாவது பெரிய ஹீரோவாக வளர்த்து விட வேண்டும் . இதனால் கண்டிப்பாக சண்முக பாண்டியன்,
ஆசைப்பட்டால் அவருடைய படத்தில் நானும் நடிப்பேன் என்று வாக்கு கொடுத்திருக்கிறார் விஷால் . மேலும் இப்போது ஒரேடியாக நாடகம் போடும் விஷால் விஜயகாந்த் இருக்கும்போதே இந்த உதவியை சண்முக பாண்டியனுக்கு செய்திருக்கலாம். அது மட்டுமல்லாமல் இவர் நடிகர்,
சங்க தேர்தலில் ஜெயிப்பதற்கு முன்பு எத்தனையோ வாக்குறுதிகளை கொடுத்திருந்தார் . ஆனால் அதை இப்போது வரை நிறைவேற்றவில்லை .அப்படி இருக்கும்போது இந்த வாக்கை மட்டும் எப்படி நிறைவேற்றுவார் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்…