தமிழ் சினிமா உலகில் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக கலக்கிக்கொண்டு வந்த விஜய் கடந்த வாரம் திடீரென அரசியலுக்கு வருவதாக அறிவித்திருந்தார். அந்த வகையில் ” தமிழக வெற்றி கழகம் ” என்ற தன்னுடைய புதிய கட்சியை தொடங்கிய விஜய் அடுத்தடுத்து பல அறிவிப்புகளை வெளியிட்டு வந்தார் . மேலும் இன்னும் ஒரு படத்தை முடித்த கையோடு முழுநேர அரசியலில் களமிறங்க உள்ளதாகவும்,
கூறியிருந்தார் விஜய் . இவரின் அரசியல் வருகைக்கு பல பேர் ஆதரவு தெரிவித்தாலும் , அதே அளவிற்கு பல பேர் விமர்சனங்களையும் கொடுத்து வருகின்றனர் . இருந்தாலும் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் அடுத்தடுத்து தன்னுடைய அரசியல் வேலையை செய்து வருகிறார் விஜய் .
அந்த வகையில் கட்சி ஆரம்பித்த உடனேயே கேப்டன் விஜயகாந்த் குடும்பத்துடன் ஒப்பந்தம் பேசியுள்ளாராம் விஜய். அது என்னவென்றால் தற்போது கட்சி ஆரம்பித்ததால் ஒரு தனி தொலைக்காட்சியும் இருந்தால் நன்றாக இருக்கும் என்று யோசித்து இருக்கிறார் விஜய் .
ஆனால் புதிதாக தொலைக்காட்சி தொடங்கினால் பல கோட்பாடுகள் இருக்கிறதாம் . இதனால் ஏற்கனவே செயல்பட்டு வரும் கேப்டன் விஜயகாந்தின் தொலைக்காட்சியை கைப்பற்றுவதற்கு விஜய் அவருடைய குடும்பத்துடன் காதும் காதும் வைத்தது போல ஒப்பந்தம் பேசி உள்ளாராம் .
மேலும் விஜயகாந்த் தனக்கு ஒரு அண்ணன் ஸ்தானத்தில் இருந்து பல உதவிகளை செய்ததால் அவருடைய தொலைக்காட்சியையே வாங்குவதற்கு விஜய் திட்டமிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் விஜயகாந்தின் குடும்பத்தார் இதை செய்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்…