கடந்த வாரம் மிக்ஜாம் புயல் சென்னையையே சூறையாடியது என்று தான் சொல்ல வேண்டும். 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு மிகப்பெரிய வெள்ளத்தில் சிக்கித்தவித்தார்கள் சென்னை மக்கள். இந்த வெள்ளத்தால் அத்தியாவசிய தேவைக்காகவே சென்னை மக்கள் போராடி வந்தார்கள் . இந்த நேரத்தில் எதையும் யோசிக்காமல் பல பிரபலங்கள் களத்தில் இறங்கி சென்னை மக்களுக்கு உதவி செய்திருந்தனர் .
அப்படி சினிமாவை சேர்ந்த பல பிரபலங்களும் தங்களால் முடிந்த நிதி உதவியை சென்னை மக்களுக்காக கொடுத்திருந்தனர் . அதில் யார் யார் கொடுத்துள்ளார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது . அந்த வகையில் இந்த வெள்ளம் வந்தபோது முதல் ஆளாய் ,
சூர்யாவும் ,கார்த்தியும் சேர்ந்து பத்து லட்சம் நிதியுதவியும் , இளம் நடிகரான ஹரிஷ் கல்யாண் ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியும் நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் நிதியுதவியும் , சன் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளரான கலாநிதி மாறன் ஐந்து கோடியும் ,
நடிகர் விஷ்ணு விஷால் 10 லட்சமும் , கே பி ஒய் பாலா ஐந்து லட்சமும் கொடுத்துள்ளார். அதோடு அறந்தாங்கி நிஷா போன்ற பல பிரபலங்கள் நேரிலேயே சென்று உதவி செய்திருந்தனர் . தற்போது அந்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தை கலக்கிக் கொண்டு வருகிறது…