மாரி செல்வராஜ் தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான இயக்குனராக இருந்து வருகிறார் . ஆரம்பத்தில் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரி செல்வராஜ் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் மாரி செல்வராஜ்.
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் , உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார் . அப்படி சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது . மேலும் சமீப காலமாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,
நல்ல திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களையும், படக் குழுவினர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகிறார். அப்படி தான் மாமன்னன் என்ற திரைப்படத்தை கொடுத்த மாரி செல்வராஜையும் நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார் ரஜினி. அப்படி அவரை நேரில் ,
அழைத்தது மட்டுமல்லாமல், தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவு ஒன்றையும் போட்டு இருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். அதில் அவர் கூறியதாவது, சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு , அவருக்கு,
என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள் ,மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு ,உதயநிதி ஸ்டாலின் , பகத் பாசில் ஆகியோருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் என்று பதிவிட்டு இருந்தார் ரஜினிகாந்த். தற்போது அவர் வெளியிட்ட பதிவு இணையத்தில் தீயாய் பரவி வருகிறது…
சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.
— Rajinikanth (@rajinikanth) July 4, 2023