தற்போது தமிழ் சினிமா உலகில் அதிகம் மார்க்கெட் உள்ள நடிகர் என்றால் அது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தான் . அபூர்வராகங்கள் என்ற படத்தின் மூலம் தன்னுடைய திரை பயணத்தை தொடங்கிய சூப்பர் ஸ்டார் இதுவரை பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்திருக்கிறார் . அதுவும் இவரிடம் ரசிகர்களுக்கு பிடித்தது அவருடைய ஸ்டைலான நடிப்புதான்.
அப்படி ஆரம்பத்தில் ஸ்டைலாக சிகரெட் பிடிப்பது, மது அருந்துவது போன்ற பல காட்சிகளில் நடித்திருந்தார் . இதனால் அப்போது இவர்களால் தான் ரசிகர்கள் கெட்டு போகிறார்கள் என்ற குற்றசாட்டும் இருந்து வந்தது . இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜெயிலர்படத்தின் ,
இசை வெளியீட்டு விழாவில் குடியை மறப்பது எப்படி என்று கூறியிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள். அந்த வகையில் அவர் கூறியதாவது , நான் மட்டும் அப்போது குடிக்காமல் இருந்திருந்தால் , இன்னும் மிகப்பெரிய உயரத்தை அடைந்திருப்பேன் .
குடியால் எத்தனையோ குடும்பங்கள் சீரழிந்து வருகிறது. நானும் அதிலிருந்து மீண்டு வந்தவன் தான் . மேலும் இந்த குடியை மறப்பதற்கு ஒரே வழி இதுதான் . அது என்னவென்றால் உங்களுக்கு குடிக்கணும் போல இருக்கும்போது, உடனே வயிறு நிறையும் வரை சாப்பிட்டு தூங்கி விடுங்கள்.
எப்போதெல்லாம் குடிக்கணும்னு தோணுதோ, அப்போதெல்லாம் நல்லா சாப்பிட்டு தூங்கிவிட்டால் சீக்கிரம் குடியை மறந்துவிடலாம் என்று கூறியிருந்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள்.இந்த தகவல் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது ..