சமீப காலமாக பணம் கொடுத்தால் எப்படி வேண்டுமானாலும் நடிப்பதற்கு ஒரு சில நடிகைகள் தயாராக உள்ளனர் . ஆனால் எத்தனை கோடி கொடுத்தாலும் கவர்ச்சி காட்ட மாட்டேன் என்று சொல்லி சினிமாவை விட்டு விலகி இருக்கிறார் ஒரு நடிகை . அவர் வேறு யாருமில்லை நடிகை சுவலட்சுமி தான் . கடந்த 1995 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ஆசை என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் ,
நடிகை சுவலட்சுமி. இப்படி வெளியான திரைப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்தது . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கோகுலத்தில் சீதை , காத்திருந்த காதல் , லவ் டுடே , கவலைப்படாதே சகோதரா ,நிலவே வா ,ஹவுஸ்புல் ,சுயமரம் ,நீ வருவாய் என போன்ற பல திரைப்படங்களில் ,
நடித்திருந்தார் நடிகை சுவலட்சுமி . அதோடு இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் ,கன்னடம் மற்றும் பெங்காலி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தவிர்க்க முடியாத நடிகையாக கொடிகட்டி பறந்து வந்த சுவலட்சுமிக்கு,
ரஜினி, கமல் போன்ற நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பும் அமைந்ததாம். ஆனால் அவர்களோடு நடிக்க வேண்டும் என்றால் கவர்ச்சி காட்ட வேண்டும் என்று சொல்லியதால் அப்படி கவர்ச்சி காட்டி நான் பிழைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சினிமாவை விட்டு விலகி,
விட்டாராம் நடிகை சுவலட்சுமி . அதோடு எந்த ஒரு கிசுகிசுவிலும் சிக்காத நடிகையாகவும் இருந்திருக்கிறார் நடிகை சுவலட்சுமி . இதன் பிறகு திருமணம் செய்து கொண்ட சுவலட்சுமி எப்படி இருக்கிறார் , என்னானார் என்ற எந்த தகவலும் தெரியாமல் இருந்து வருகிறது…