May 8, 2024

ஜெயி லர் வெற்றி யா ல் தலை கால் புரி யல ..!! இர ண்டு மட ங்கு சம்பள த்தை ஏற் றிய நெல் சன் ..!! காற்று ள்ள போ தே தூற் றிக் கொ ள்கிறா ர் போ ல..!!

நெல்சன் திலிப்குமார் ஓர் தவிர்க்க முடியாத தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார்.  ஆரம்பத்தில் விஜய் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த நெல்சன் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகை நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் திரைப்படமே இவருக்கு ஏகபோக வரவேற்பை பெற்று தந்தது என்று தான் சொல்ல வேண்டும் .  பின்னர் இந்தப் படத்தை தொடர்ந்து,

சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற படத்தை இயக்கி இருந்தார் . இதன் மூலம் இவருக்கு விஜய் யை வைத்து இயக்கும் வாய்ப்பு கிடைத்தது . அப்படி விஜய்யை வைத்து பீஸ்ட் என்ற படத்தை இயக்கி இருந்தார் . பின்னர்  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வைத்து ஜெயிலர் என்று சூப்பர் ஹிட்  படத்தை  கொடுத்து தனக்கென,

ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் இயக்குனர் நெல்சன்  அதுவும் சமீபத்தில் சூப்பர் ஸ்டாரை  வைத்து நெல்சன் இயக்கிய ஜெயிலர் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது மட்டுமல்லாமல் இதுவரை 525 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது . இதனால் தன்னுடைய சம்பளத்தை  இயக்குனர் நெல்சன் ,

இரண்டு மடங்கு உயர்த்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.  அந்த வகையில் ஜெயிலர் படத்திற்காக 10 கோடி சம்பளம் வாங்கிய இயக்குனர்  நெல்சன் அடுத்த படத்திற்கு 30 கோடி சம்பளம் கேட்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.  இன்னும் சிலர் அவர் 50 கோடி கூட கேட்பதற்கு வாய்ப்பு உள்ளது என்று கோலிவுட் வட்டாரத்தில் ,

பேசப்படுகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் இயக்குனர் நெல்சன் காற்றுள்ள போதே தூற்றிக் கொள்கிறார் போல என்று கூறி வருகின்றனர். இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *