ஏ ஆர் ரகுமான் ஓர் தவிர்க்க முடியாத இந்திய திரைப்பட இசையமைப்பாளர் ஆவார். கடந்த 1992 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ரோஜா என்ற படத்தின் மூலம் தன்னுடைய இசை பயணத்தை தொடங்கிய ஏ ஆர் ரகுமான் இதுவரை தமிழ் ,தெலுங்கு, மலையாளம் ,ஆங்கிலம் என்று 145 படங்களுக்கு மேல் பணிபுரிந்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
அதுமட்டுமில்லாமல் இரண்டு ஆஸ்கர் விருது , தேசிய விருது என்று பல உயரிய விருதுகளையும் வாங்கி குவித்து வைத்திருக்கிறார் ஏ ஆர் ரகுமான் . இப்படி தவிர்க்க முடியாத இசையமைப்பாளராக இருந்து வந்த ஏ ஆர் ரகுமான் கடந்த 1995 ஆம் ஆண்டு சாயிரா பானு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணமான இவர்களுக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இப்படி இருக்கும் நிலையில் ஆஸ்கர் மேடை முதல் உள்ளூர் மேடை வரை மனைவியின் பேச்சை மட்டும் தான் கேட்பாராம் ஏ ஆர் ரகுமான் . அந்த வகையில் ஏ ஆர் ரகுமானின் மனைவி ஒரு ஆடை வடிவமைப்பாளராம்.
கிட்டத்தட்ட 15 வருடங்களாக ஏ ஆர் ரகுமானுக்கு அவருடைய மனைவி தான் ஆடை வடிவமைப்பாளராக இருந்து வருகிறாராம். அப்படி ஏ ஆர் ரகுமான் எந்த நிகழ்ச்சிக்கு எப்படி செல்ல வேண்டும் என்பதை அவர் தான் முடிவு செய்வாராம் . அப்படி மனைவி எதை அணிய,
சொல்கிறாரோ அதையே யோசிக்காமல் அணிந்து கொள்வாராம் ஏ ஆர் ரகுமான் . இதுவும் இவருடைய வெற்றியின் ரகசியம் என்று கூறப்படுகிறது . அது மட்டுமல்லாமல் என்னுடைய அனைத்து புகழும் என்னுடைய மனைவிக்கே என்றும் கூறியிருந்தார் ஏ ஆர் ரகுமான்…