விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான ஏராளமான கலைஞர்களில் ஒருவர் தான் கே பி ஒய் பாலா . கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாலா தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று தனக்கென ஒரு தனி எழுத்தை பிடித்துக் கொண்டார் . குறிப்பாக இதன் மூலம் பாலாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது .
அந்த வகையில் தமிழில் வெளியான பல படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் அண்மைக்காலமாக இவர் செய்து வரும் உதவிகள் அனைத்தும் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி வருகிறது . அந்த வகையில் ஏற்கனவே நான்கு இலவச ஆம்புலன்ஸ்,
வாங்கி கொடுத்திருந்த கே பி ஒய் பாலா தற்போது ஐந்தாவது ஆம்புலன்ஸை வாங்கி கொடுத்திருக்கிறார் . என்னதான் ஒரு பக்கம் இவருக்கு பாராட்டுக்கள் வந்தாலும் மறுபக்கம் இவரை திட்டுபவர்களும் இருக்கிறார்களாம் . அந்த வகையில் பாலா தொடர்ந்து செய்து வரும் உதவியை,
பார்த்த ஒருவர் நீ வருங்காலத்தில் சிக்னலில் பிச்சைதான் எடுப்ப , நான் பார்த்தா கூட காசு போடாமல் தான் போவேன் என்று கூறியிருக்கிறார். இதை பார்த்தும் மனம் தளராத பாலா நான் எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறேனோ , அந்த சிக்னலில் என்னுடைய ஆம்புலன்ஸ் வரும் .
என்று விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருந்தார் பாலா. மேலும் கோடி கோடியாக சம்பளம் வாங்கி மக்களுக்கு ஒரு ரூபாய் செலவு செய்யாத நடிகர்களை எதுவும் கேட்காதவர்கள் , பாலா போன்ற பல பிரபலங்கள் உதவி செய்வதை விமர்சிப்பது தவறான ஒன்று என்று கூறப்படுகிறது…