April 27, 2024

வருங்காலத்தில் பிச்சை தான் எடுப்ப..!! உதவி செய்யும் பாலாவை மோசமாக விமர்சித்த நபர் ..!! சரியான பதிலடி கொடுத்த பாலா ..!!

விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான ஏராளமான கலைஞர்களில் ஒருவர் தான் கே பி ஒய் பாலா . கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்த பாலா தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பல நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று தனக்கென ஒரு தனி எழுத்தை பிடித்துக் கொண்டார் . குறிப்பாக இதன் மூலம் பாலாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தது .

அந்த வகையில் தமிழில் வெளியான பல படங்களில் காமெடியனாக நடித்திருக்கிறார் . இப்படி இருக்கும் நிலையில் அண்மைக்காலமாக இவர் செய்து வரும் உதவிகள் அனைத்தும் அனைவரையும் ஆச்சிரியத்தில் ஆழ்த்தி வருகிறது . அந்த வகையில் ஏற்கனவே நான்கு இலவச ஆம்புலன்ஸ்,

வாங்கி கொடுத்திருந்த கே பி ஒய்  பாலா தற்போது ஐந்தாவது ஆம்புலன்ஸை வாங்கி கொடுத்திருக்கிறார் . என்னதான் ஒரு பக்கம் இவருக்கு பாராட்டுக்கள் வந்தாலும் மறுபக்கம் இவரை திட்டுபவர்களும் இருக்கிறார்களாம் . அந்த வகையில் பாலா தொடர்ந்து செய்து வரும் உதவியை,

பார்த்த ஒருவர் நீ வருங்காலத்தில் சிக்னலில் பிச்சைதான் எடுப்ப , நான் பார்த்தா கூட காசு போடாமல் தான் போவேன் என்று கூறியிருக்கிறார்.  இதை பார்த்தும் மனம் தளராத பாலா நான் எந்த சிக்னலில் பிச்சை எடுக்கிறேனோ , அந்த சிக்னலில் என்னுடைய ஆம்புலன்ஸ் வரும் .

என்று விமர்சனங்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்திருந்தார் பாலா.  மேலும் கோடி கோடியாக சம்பளம் வாங்கி மக்களுக்கு ஒரு ரூபாய் செலவு செய்யாத நடிகர்களை எதுவும் கேட்காதவர்கள் , பாலா போன்ற பல பிரபலங்கள் உதவி செய்வதை விமர்சிப்பது தவறான ஒன்று என்று கூறப்படுகிறது…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *