தமிழ் சினிமா உலகில் பல வருடங்களாக முன்னணி நடிகை என்ற அந்தஸ்தில் கலக்கி கொண்டு வருபவர் நடிகை நயன்தாரா . சரத்குமார் நடிப்பில் வெளியான ஐயா என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை நயன்தாரா . பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே தமிழ் சினிமாவை கலக்கி வந்த பல முன்னணி நடிகர்களுடன் நடித்து பிரபலமானார். இவர் அறிமுகமாகி பல வருடங்கள்,
ஆகியும் இவருடைய இடத்தை பிடிப்பதற்கு எந்த நடிகையாலும் முடியவில்லை . இதனால் லேடி சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தில் இருந்து வருகி றார் நடிகை நயன்தாரா . மேலும் ஆரம்பத்தில் நடிக்கும் போது பல நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்ட நடிகை நயன்தாரா கடைசியில் இயக்குனர்,
விக்னேஷ் சிவனை கரம் பிடித்தார். அப்படி திருமணமான சில மாதங்களிலேயே வாடகை தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றுக் கொண்டார் நடிகை நயன்தாரா . இந்த விஷயம் அப்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இருந்தாலும் அதையெல்லாம் எதிர்கொண்ட,
நயன்தாரா மகன்கள் பிறந்து பத்து மாதங்கள் ஆகியும் வெளியில் காட்டாமல் இருந்து வந்தார். அப்படியே புகைப்படத்தை வெளியிட்டாலும் முகம் தெரியாதவாறு தான் வெளியிடுவார். இப்படி இருக்கும் நிலையில் தன்னுடைய இரட்டை மகன்களின் முகத்தை முதல்முறையாக தன்னுடைய,
சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா . அந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப்பார்த்த ரசிகர்கள் ஒரு வழியாக மகன்களின் முகத்தை காட்டி விட்டாரே என்று கூறி வருகின்றனர் . இதோ அந்த வீடியோவை நீங்களும் பாருங்க…
View this post on Instagram