பொதுவாகவே ஆண்கள் செய்யும் விஷயங்களை பெண்களால் செய்ய முடியாது என்ற எழுதப்படாத சட்டம் ஒன்று இருந்து வந்தது. ஆனால் தற்போது உள்ள பெண்கள் எல்லாம் அதை தங்களுடைய விடாமுயற்சியின் மூலம் தகர்த்தெறிந்து வருகின்றனர் . அப்படி ஆண்களால் மட்டும் தான் பேருந்தை இயக்க முடியும் என்ற நிலையில் கோவையில் முதல் தனியார் பேருந்து ஓட்டுனராக களம் இறங்கினார் ,
ஷர்மிளா என்ற பெண். அப்போது இவரை பல பிரபலங்கள் பாராட்டித்தள்ளினார்கள் இப்படி இருக்கும் நிலையில் இவருக்கும் பேருந்து நடத்தினருக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தால் ஷர்மிளாவை வேலையை விட்டு நிறுத்தியுள்ளனர். இதன் பிறகு இவருக்கு எதிராக பலரும்,
குரல் கொடுத்திருந்தார்கள் . இந்த நேரத்தில்தான் உலகநாயகன் கமல்ஹாசன் ஷர்மிளாவிற்கு கார் ஒன்றை பரிசாக கொடுத்தார் என்று சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது. இதைப் பார்த்த பலரும் இவர் அப்படி என்ன சாதனை செய்துவிட்டார் இவருக்கு கார்,
கொடுத்திருக்கிறார் என்றெல்லாம் சொல்லி வந்தனர். இப்படி இருக்கும் நிலையில் கமல்ஹாசன் எங்களுக்கு காரெல்லாம் கொடுக்கவில்லை என்று குண்டைத் தூக்கிப் போட்டு உள்ளார் ஷர்மிளாவின் அப்பா . அந்த வகையில் பேட்டி ஒன்றில் ஷர்மிளாவின்,
அப்பாகூறியதாவது , கமல்ஹாசன் எங்களுக்கு காரெல்லாம் கொடுக்கவில்லை , கார் வாங்க சொல்லி மூன்று லட்சம் ரூபாய் செக் கொடுத்திருந்தார் . கார் வாங்கிய பிறகு அவரிடம் அதைப் பற்றி தெரிவிக்க வேண்டும் இது தெரியாமல் ஏதோ ஏதோ பேசுகிறார் என்று கூறியிருந்தார் …