தென்னிந்திய சினிமா உலகில் ஒரு பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை அனுபாமா பரமேஸ்வரன். கடந்த 2015 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியானார் பிரேமம் என்ற படத்தில் மூலம் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை அனுபாமா பரமேஸ்வரன் . இப்படி இவர் நடித்த முதல் திரைப்படமே இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது. பின்னர் கடந்த 2016 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில்,
வெளியான கொடி என்ற படத்தில் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை அனுபாமா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தள்ளிப் போகாதே என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம் மற்றும் ,
கன்னட மொழி படங்களிலும் தொடர்ந்து நடித்துக்கொண்டு வருகிறார் . இதை அடுத்து பல வருடங்கள் இடைவேளைக்குப் பிறகு தற்போது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் சைரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார் நடிகை அனுபாமா. இந்த படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக,
நடித்துள்ளாராம் . இப்படி இருக்கும் நிலையில் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் அனுபவமா கல்யாண கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதைப் பார்த்த ரசிகர்கள் அனுபமாவுக்கு திருமணம் ஆகி விட்டதா என்று ,
கேள்வி எழுப்பி வருகின்றனர் . ஆனால் இது ஜெயம் ரவி நடிப்பில் உருவாகி வரும் சைரன் படத்தின் படப்பிடிப்பிற்காக எடுத்த புகைப்படமாம் . இதோ அந்த புகைப்படங்களை நீங்களும் பாருங்க…