விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் தான் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி. இந்த நிகழ்ச்சியில் நாட்டுப்புறப் பாடல்களை பாடி இருவருமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்கள். இதன் பிறகு சினிமாவில் இருவரும் பாடகர்கள் ஆகவும் அறிமுகமானார்கள் . அந்த வகையில் ராஜலட்சுமி விஸ்வாசம், சார்லி சாப்ளின் 2 ,புஷ்பா ,வெற்றிவேல் போன்ற ,
பல திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்களை பாடி பிரபலமானார் . மேலும் இவர்கள் கச்சேரி நடத்தியும் வருமானத்தை ஈட்டி வருகின்றனர். அந்த வகையில் சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த இசை கச்சேரிக்காக சென்றிருந்த ராஜலட்சுமி மாடர்ன் உடையில் ஆங்கிலம் பேசும்,
வீடியோவை பகிர்ந்து இருந்தார் . ஆனால் இதைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் மோசமாக கமெண்ட் செய்திருந்தனர் . குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கதர் ஆடைகளை மட்டுமே அணிவோம் என்று கூறியிருந்தனர். அப்படி கூறியவர்கள் இன்று மாடர்ன் உடையில் இருந்ததால்,
ரசிகர்கள் மோசமாக கமெண்ட் செய்துள்ளனர் . இதை பார்த்த ராஜலட்சுமி ஆங்கிலத்தை நமக்குள்ளேயே பேசினால் தவறுகள் தெரியாது. அதனால் ஆங்கிலத்தில் பேசி வீடியோ போட்டேன். நான் ஆங்கிலத்தில் பேசியதை மட்டுமல்லாமல் , நான் அணிந்திருந்த உடை குறித்தும்,
மோசமாக கமெண்ட் செய்திருந்தார்கள் . அடிப்படை அறிவு இல்லாதவர்கள் தான் இப்படி செய்வார்கள் , எனக்கு எது சரியோ அதை நான் செய்கிறேன் . எனக்குன்னு ஒரு சுய ஒழுக்கம் இருக்கு, அதை நான் கண்டிப்பாக கடைப்பிடிப்பேன் என்று கூறியிருந்தார் ராஜலட்சுமி…