May 3, 2024

அடிப்படை அறிவு கூட இல்லையா ..?? அந்த மாதிரி உடை அணிவது என்னுடைய இஷ்டம் ..!! கோபத்தில் பொங்கிய “சூப்பர் சிங்கர்” ராஜலட்சுமி ..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்கள் தான் செந்தில் கணேஷ்- ராஜலட்சுமி.  இந்த நிகழ்ச்சியில் நாட்டுப்புறப் பாடல்களை பாடி இருவருமே ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார்கள்.  இதன் பிறகு சினிமாவில் இருவரும் பாடகர்கள் ஆகவும் அறிமுகமானார்கள் . அந்த வகையில் ராஜலட்சுமி விஸ்வாசம், சார்லி சாப்ளின் 2 ,புஷ்பா ,வெற்றிவேல் போன்ற ,

பல திரைப்படங்களில் இடம் பெற்ற பாடல்களை பாடி பிரபலமானார் . மேலும் இவர்கள் கச்சேரி நடத்தியும் வருமானத்தை ஈட்டி வருகின்றனர்.  அந்த வகையில் சமீபத்தில் வெளிநாட்டில் நடந்த இசை கச்சேரிக்காக சென்றிருந்த ராஜலட்சுமி மாடர்ன் உடையில் ஆங்கிலம் பேசும்,

வீடியோவை பகிர்ந்து இருந்தார் . ஆனால் இதைப் பார்த்த ரசிகர்கள் மிகவும் மோசமாக கமெண்ட் செய்திருந்தனர் . குறிப்பாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கதர் ஆடைகளை மட்டுமே அணிவோம் என்று கூறியிருந்தனர்.  அப்படி கூறியவர்கள் இன்று மாடர்ன் உடையில் இருந்ததால்,

ரசிகர்கள் மோசமாக கமெண்ட் செய்துள்ளனர் . இதை பார்த்த ராஜலட்சுமி ஆங்கிலத்தை நமக்குள்ளேயே பேசினால் தவறுகள் தெரியாது.  அதனால் ஆங்கிலத்தில் பேசி வீடியோ போட்டேன்.  நான் ஆங்கிலத்தில் பேசியதை மட்டுமல்லாமல் , நான் அணிந்திருந்த உடை குறித்தும்,

மோசமாக கமெண்ட் செய்திருந்தார்கள் . அடிப்படை அறிவு இல்லாதவர்கள் தான் இப்படி செய்வார்கள் , எனக்கு எது சரியோ அதை நான் செய்கிறேன் . எனக்குன்னு ஒரு சுய ஒழுக்கம் இருக்கு, அதை நான் கண்டிப்பாக கடைப்பிடிப்பேன் என்று கூறியிருந்தார் ராஜலட்சுமி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *