April 26, 2024

திருப்பதியில் மொட்டை அடித்து ..!! நேர்த்திக்கடன் செலுத்திய ” விஜய் -அஜித் ” பட நடிகை ..!! வைரலாகும் புகைப்படம் உள்ளே ..!!

சுரேகா வாணி ஊர் பிரபலமான தென்னிந்திய திரைப்பட குணச்சித்திர நடிகை ஆவார் . ஹிந்தி படத்தின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை  தொடங்கிய சுரேகா வாணி கடந்த 2010 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளியான உத்தம உத்திரன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானார்.  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து விக்ரம் நடிப்பில் வெளியான தெய்வத்திருமகள் ,

சித்தார்த் நடிப்பில் வெளியான காதலில் சொதப்புவது எப்படி, சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான  எதிர்நீச்சல் , விஜய் நடிப்பில் வெளியான  ஜில்லா, மெர்சல், சந்தானம் நடிப்பில் வெளியான  சக்க போடு போடு ராஜா , அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் ,

சிம்பு நடிப்பில் வெளியான வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சுரேகா வாணி . மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு,  மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் குணச்சித்திர நடிகையாக நடித்திருக்கிறார்,

என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே சுரேஷ் என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகை சுரேகா வாணிக்கு ஹீரோயின் போல ஒரு மகளும் இருக்கிறார் .  இப்படி இருக்கும் நிலையில் திருப்பதி சென்று மொட்டை அடித்து நேர்த்திக்கடன் செலுத்தி இருக்கிறார் சுரேகா வாணி.

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது . இதோ அந்த புகைப்படத்தை நீங்களும் பாருங்க…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *