நேற்று நடிகர் விஜய் அதிரடியாக தன்னுடைய புதிய கட்சியின் பெயரை அறிவித்திருந்தார் . அந்த வகையில் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை தொடங்கிய விஜய் கண்டிப்பாக முதலமைச்சர் ஆவார் என்று அவருடைய ரசிகர்கள் கூறி வருகின்றனர் . குறிப்பாக நான் பொழுதுபோக்கிற்காக அரசியலுக்கு வரவில்லை என்றும் , எனக்கென ஒரு சமூக அக்கறை உள்ளது என்றும் அதை சிறப்பாக செய்வேன்,
என்றும் வாக்கு கொடுத்திருந்தார் விஜய் . தற்போது விஜய் கோட் படத்தில் பிசியாக நடித்து வருவதால் இந்தப் படத்தை முடித்த கையோடு இன்னொரு படத்தில் நடித்து முடித்தவுடன் முழுநேர அரசியலில் களமிறங்க உள்ளார் என்று தகவல் வெளியானது . மேலும் நடிகர் விஜய் நடிப்பதை,
நிறுத்தி விட்டால் தமிழ் சினிமாவிற்கு நஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும் . காரணம் வருடத்திற்கு இரண்டு திரைப்படங்களிலாவது நடித்து வருகிறார் விஜய். அப்படி இவருடைய திரைப்படம் மோசமான வரவேற்பை பெற்றாலும் கூட வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெறுகிறது.
இதனால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு லாபம் இருந்து வந்தது . தற்போது விஜய் சினிமாவை விட்டு விலகுவதால் தியேட்டர் உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது. அதோடு தற்போது அடுத்த தளபதி யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது .அந்த வகையில்,
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தன்னுடைய நடிப்பால் கவர்ந்து வைத்திருந்த விஜய்யின் இடத்தை சிவகார்த்திகேயன் தான் பிடிப்பார் . காரணம் அவரும் விஜய் போலவே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை நடிப்பால் கவர்ந்து வைத்திருக்கிறார்…