விஜய் தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான கலைஞர்களில் முக்கியமான ஒருவர் தான் கே பி ஒய் பாலா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் தன்னுடைய டைமிங் காமெடியின் மூலம் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர் தான் பாலா . ஆரம்பத்தில் பல கஷ்டங்களைக் கடந்து மேலே வந்த பாலா பின்னர் தமிழில் வெளியான பல திரைப்படங்களில் ,
காமெடி வேடங்களில் நடித்து அசத்தியிருந்தார். அப்போதெல்லாம் பிரபலமாகாத பாலா தற்போது அவர் செய்யும் உதவிகளால் பெரிய அளவில் பிரபலமானது மட்டுமல்லாமல் பல பேரின் பாராட்டுகளையும் வாங்கி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே இலவசமாக மூன்று ஆம்புலன்ஸ் களை,
வழங்கியிருந்த பாலா சமீபத்தில் சென்னை மக்களுக்காக 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருந்தார் . இதை அடுத்து தற்போது இலவச சுத்திகரிப்பு தண்ணீர் வசதியை செங்கல்பட்டு மக்களுக்காக செய்து கொடுத்திருக்கிறார் பாலா . அந்த வகையில் செங்கல்பட்டு மாவட்டத்தில்,
உள்ள கிராமத்தில் சில வருடங்களாக சுகாதாரமற்ற குடிநீரை குடித்ததால் உயிரிழப்புகளும் ,உடல்நல பிரச்சனைகளும் அதிகம் ஏற்பட்டுள்ளதாம். இதனால் அந்த கிராமத்தில் இருக்கும் மக்கள் ஒன்று சேர்ந்து பாலாவிடம் கோரிக்கை வைத்திருந்தனர் . அவர்கள் சொல்லி சில நாட்களிலேயே,
அந்த கோரிக்கையை நிறைவேற்றி வைத்திருக்கிறார் பாலா . அந்த வகையில் 3 லட்சம் செலவு செய்து அந்த மக்களுக்காக குடிநீர் சுத்திகரிக்கும் கருவி ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார் பாலா. இதை பார்த்த ரசிகர்கள் உங்க நல்ல மனசுக்கு நீங்க நூறு வருஷம் வாழனும் என்று கூறி வருகின்றனர் …