May 1, 2024

கல்யாணமே நடக்கலைனாலும் பரவாயில்ல..!! எனக்கு அது தான் முக்கியம் ..!! 33 வயதில் வெளிப்படையாக சொல்லிய நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ..!!

தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் . ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான நீதான அவன் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார் .இருந்தாலும் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது அட்டகத்தி , ரம்மி போன்ற படங்களின்  மூலம் தான்.

இதன் பிறகு காக்கா முட்டை படத்தில் இவர் ஏற்று நடித்த கதாபாத்திரம் பெரிய அளவில் பேசப்பட்டது .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தர்மதுரை, குற்றமே தண்டனை ,செக்க சிவந்த வானம், வடசென்னை, கனா ,  க / பெ ரணசிங்கம்,  திட்டம் இரண்டு என்று தொடர்ச்சியாக பல,

சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார் . மேலும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் ,தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழி படங்களிலும் நடித்திருக்கிறார். ஆனால் சமீப காலமாக இவருடைய நடிப்பில் வெளியான எந்த திரைப்படங்களும் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை.

இந்நிலையில் தற்போது 33 வயதாகும் ஐஸ்வர்யா ராஜேஷ் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்து வருகிறார். இந்நிலையில் திருமணம் பற்றிய கேள்விக்கு பதிலளித்த ஐஸ்வர்யா ராஜேஷ் கூறியதாவது , திருமணம் எல்லாம் நடக்கும் போது தான் நடக்கும் . அது நடக்க வேண்டும் என்று,

இருந்தால் கண்டிப்பாக நடக்கும் ,இல்லை என்றால் நடக்காது . குறிப்பாக கல்யாணம் நடக்கவில்லை என்றாலும் பரவாயில்லை எனக்கு படங்கள் தான் முக்கியம் , அதில் தான் என்னுடைய கவனம் இருக்கும் என்று கூறியிருந்தார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *