தற்போது தமிழ் சினிமா ரசிகர்களின்பேவரைட் நடிகையாக இருந்து வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ் . ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த நடிகை கீர்த்தி சுரேஷ் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான இது என்ன மாயம் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் . ஆனால் இவர் ரசிகர்களிடையே பெரிய அளவில் பிரபலமானது ரஜினி முருகன் படத்தின் மூலம்தான்.
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தொடரி, ரெமோ ,பைரவா ,தானா சேர்ந்த கூட்டம் ,சர்கார், சண்டக்கோழி 2 போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ். மேலும் நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களிலும் ,
தொடர்ந்து நடித்துக் கொண்டு வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் கீர்த்தி சுரேஷின் அழகின் மயங்கியுள்ளாராம் 67 வயது நடிகர் ஒருவர் . அவர் வேறு யாருமில்லை நடிகர் சிரஞ்சீவி தான். சமீபத்தில் சிரஞ்சீவி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் போலோ சங்கர். இந்த படத்தில் ,
சிரஞ்சீவிக்கு தங்கையாக நடித்திருந்தார் நடிகை கீர்த்தி சுரேஷ் . இப்படியொரு நிலையில் இந்தப் படத்தின் பேட்டியின்போது கீர்த்தி சுரேஷ் படத்தில் தான் எனக்கு தங்கச்சி. ஆனால் அடுத்த படத்தில் அவர் எனக்கு கதாநாயகியாக நடிப்பார் . அவர் என்னுடைய டார்லிங் என்று,
கூறியது மட்டுமல்லாமல், பொது மேடையிலேயே அவருடைய கையை பிடித்ததால் கொஞ்சம் தர்ம சங்கடத்திற்கு ஆளானார் நடிகை கீர்த்தி சுரேஷ் . இப்படி மகள் வயதில் இருக்கும் நடிகை யிடம் சிரஞ்சீவி இப்படி நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது…