தமிழ் சினிமா உலகில் ஒரு நடிகராகவும், அரசியல்வாதியாகவும் கலக்கிக்கொண்டு வந்தவர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள். குறிப்பாக இவர் நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் . அதனால் தான் அவர் வீட்டில் முடங்கி கிடந்த போதும் அவருக்காக பல ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். இப்படி இருக்கும் நிலையில் கடந்த இரண்டு வாரத்துக்கு முன்பு ,
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விஜயகாந்த் . இதன் பிறகு இவருடைய உடல் நிலையில் பின்னடைவு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது . இதன் பிறகு கேப்டன் நலமுடன் தான் இருக்கிறார் . அவர் செய்த தர்மம் கண்டிப்பாக,
அவரை காப்பாற்றும் என்று கூறியிருந்தார் விஜயகாந்தின் மனைவியான பிரேமலதா. இப்படி இருக்கும் நிலையில் நேற்று திடீரென விஜயகாந்தின் உடல்நலையில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டதாக தகவல் வெளியானது . அது மட்டுமல்லாமல் சினிமா பிரபலங்களான,
நாசர் , ஆர் கே செல்வமணி போன்றவர்கள் மருத்துவமனைக்கே சென்று விஜயகாந்தை நலம் விசாரித்து வந்தனர். இதனால் ரசிகர்கள் உச்சகட்ட பதட்டத்தில் இருந்து வந்தனர் . இப்படி இருக்கும் நிலையில் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கேப்டனின் ,
லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்டு விஜயகாந்த் ஆரோக்கியமாக தான் இருக்கிறார், வீண் வதந்திகளை யாரும் பரப்பாதீர்கள் என்று கூறியிருந்தார் பிரேமலதா . இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் தற்போது ஆறுதல் அடைந்து வருகின்றனர்…