ஓவியா ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார். கடந்த 2010 ஆம் ஆண்டு விமல் நடிப்பில் வெளியான களவாணி என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஓவியா. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து முத்துக்கு முத்தாக, மெரினா, கலகலப்பு ,மூடர் கூடம் ,மதயானை கூட்டம் ,யாமிருக்க பயமே, 144 போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை ஓவியா .
மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு , மலையாளம் மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பி டத்தக்கது . இதன் பிறகு பிக் பாஸில் கலந்து கொண்டு பெரிய அளவில் பிரபலமானார் நடிகை ஓவியா . அதுவும் ஓவியா பிக் பாஸில் இருந்த போது,
அவருக்கென்று ஒரு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே இருந்து வந்தது . ஆனால் அதன் பிறகு தேவையில்லாத படத்தில் நடித்து தன்னுடைய பெயரை எடுத்துக் கொண்டார் நடிகை ஓவியா . இப்படி இருக்கும் நிலையில் 32 வயதான நடிகை ஓவியா இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் ,
இருந்து வருகிறார் . ஆனால் எனக்கு ஒரு குழந்தை இருக்கு என்று வெளிப்படையாக கூறியுள்ளார். அந்த வகையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய ஓவியா, எனக்கு திருமணம் ஆகவில்லை என்றாலும் , எனக்கு ஒரு குழந்தை இருப்பதாக கூறி இருந்தார் . அது அவருடைய நாய்க்குட்டி,
தானாம் . அந்த நாய்க்குட்டியை குழந்தையைப் போலத்தான் பார்த்துக் கொள்கிறாராம் நடிகை ஓவியா . அது மட்டுமல்லாமல் அந்த நாய்க்குட்டி என்னுடைய பக்கத்தில் தான் தூங்கும் என்றும் கூறியிருந்தார் நடிகை ஓவியா…