மகாலட்சுமி ஒரு பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார் . சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான அரசி என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் மகாலட்சுமி . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து வாணி ராணி ,தேவதையை கண்டேன் ,செல்லமே, பிள்ளை நிலா, உதிரிப்பூக்கள் போன்ற பல சீரியல்களில் நடித்திருந்தார் . இதனிடையே அனில் என்பவரை திருமணம் செய்து கொண்ட மகாலட்சுமிக்கு,
ஒரு மகனும் இருக்கிறார். இதன் பிறகு கணவரை பிரிந்து தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் நடிகை மகாலட்சுமி . அப்போது இவர்களுடைய திருமணம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது . குறிப்பாக பணத்திற்காக தான்,
மகாலட்சுமி அவரை திருமணம் செய்து கொண்டார் என்று பலரும் கூறி வந்தனர் . ஆனால் அதையெல்லாம் கண்டு கொள்ளாமல் இவர்கள் இருவரும் ஒரு வருடம் நன்றாக தான் வாழ்ந்து வந்தனர் . குறிப்பாக அடிக்கடி ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு அவர்களுடைய,
அன்பை பறிமாறிக்கொண்டனர். இப்படி இருக்கும் நிலையில் தற்போது ரவீந்தர் ஜெயிலில் கம்பி எண்ணி வருகிறாராம் . அந்த வகையில் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் என்று கூறி போலி ஆவணங்களை வைத்து 16 கோடி பண மோசடி செய்து இருக்கிறார் ரவீந்தர்.
இதனால் தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார் ரவீந்தர் . இப்படி கல்யாணமாகி ஒரு வருடத்திலேயே கணவரின் சுயரூபம் தெரிந்து விட்டதால் நம்பி ஏமாந்து விட்டோமே என்று நெருங்கிய தோழிகளிடம் புலம்பி வருகிறாராம் நடிகை மகாலட்சுமி…