தமிழ் சினிமாவை பொருத்தவரை அப்போதெல்லாம் குடும்ப திரைப்படங்களுக்கு மிகப்பெரிய ஆதரவு இருக்கும் . குறிப்பாக அப்போது குடும்ப படங்களை இயக்கும் இயக்குனர்கள் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்கள் . அப்படி ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்களில் ஒருவர்தான் இயக்குனர் சேரன் . தொடர்ந்து குடும்ப படங்களையும் சமூக அக்கறை கொண்ட படங்களையும் எடுத்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்,
இயக்குனர் சேரன் அவர்கள் . ஆனால் ஒரு கட்டத்தில் இயக்குனர் சேரனை தமிழ் மக்கள் மறந்து விட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும் . இதனால் அவரும் இயக்குவதை நிறுத்திவிட்டு படங்களில் நடித்துக்கொண்டு வந்தார் . இப்படி இருக்கும் நிலையில் நாலு வருடங்கள் கழித்து,
இயக்குனர் அவதாரம் எடுக்க உள்ள இயக்குனர் சேரன் கூறியதாவது , போதைப் பழக்கம், வன்முறை, தீய செயலுக்கு வழிவகுக்கும் படங்கள் தான் 500 கோடி, ஆயிரம் கோடி வசூல் செய்கிறது. மக்களும் விரும்பி போய் பார்க்கிறார்கள். அதனால் அவர்களும் அதே மாதிரி படங்களை தொடர்ந்து,
எடுக்கிறார்கள் . மேலும் நிறைய புதிய இயக்குனர்கள் வந்ததால் எங்களை எல்லாம் மறந்து விட்டார்கள். இது எனக்கு மிகுந்த கோபத்தை ஏற்படுத்தியது . இதனால்தான் அவர்களுக்கு இணையாக நானும் இறங்குவதற்கு முடிவெடுத்து விட்டேன் என்று கூறியிருந்தார் இயக்குனர் சேரன்.
அந்த வகையில் அடுத்ததாக 100 கோடி பட்ஜெட்டில் நான் ஈ பட வில்லனான நடிகர் கிச்சா சுதீப்பை வைத்து புதிய பான் இந்திய படம் ஒன்றை எடுக்க உள்ளாராம் இயக்குனர் சேரன் …