இயக்குனர் மாரி செல்வராஜ் ஓர் பிரபலமான தமிழ் திரைப்பட இயக்குனர் ஆவார் . ஆரம்பத்தில் இயக்குனர் ராமிடம் உதவி இயக்குனராக பணியாற்றி வந்த மாரி செல்வராஜ் கடந்த 2018 ம் ஆண்டு வெளியான பரியேறும் பெருமாள் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அவதாரம் எடுத்தார். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து தனுஷை வைத்து கர்ணன் , உதயநிதி ஸ்டாலினை வைத்து மாமன்னன் ,
போன்ற சூப்பர் ஹிட் படங்களை இயக்கியிருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ் . மேலும் இவர் எடுத்த மூன்று திரைப்படங்களுமே சாதியை எதிர்த்து போராடும் வகையில் தான் இருக்கும். இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகர் ஒருவர் இயக்குனர் மாரி செல்வராஜை பற்றி புட்டு புட்டு வைத்துள்ளார் .
அவர் வேறு யாருமில்லை காமெடி நடிகரான டெலிபோன் ராஜ் தான். சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய நடிகர் டெலிபோன் ராஜ் கூறியதாவது, சாதி வெறியை தூண்டும் வகையில் படங்களை எடுப்பது மிகவும் மோசமான செயல் . இப்போது இருக்கும் காலகட்டத்தில் சாதியை பற்றி பேசி மேலும் ஜாதி வெறியை,
தூண்டி விடுகிறார்கள். மேலும் இயக்குனர் மாரி செல்வராஜ் ஒரு சரியான சைக்கோ . படப்பிடிப்பில் மற்ற நடிகர்களை எல்லாம் அடிப்பார் . அதுவும் கர்ணன் படத்தின் ஒரு காட்சியில் ஒரு நடிகையை உண்மையாகவே அடிக்க சொல்லி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ் .
அப்போதுதான் அந்த காட்சி உண்மையாக இருக்குமாம் . அதற்காக இப்படியா சித்தரவதை செய்வது .? அது மட்டுமல்லாமல் அவருடைய ஊரில் இருக்கும் நடிகர்களையே தொடர்ந்து நடிக்க வைத்து வருகிறார் என்ற குற்றச்சாட்டுகளும் இருக்கிறது என்று கூறியிருந்தார் டெலிபோன் ராஜ்…