தமிழ் சினிமா இயக்குனர்களின் இயக்குனர் பாலா மட்டும் கொஞ்சம் வித்தியாசமானவர் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான் . குறிப்பாக நடிக்கத் தெரியாதவர்கள் கூட இவருடைய படத்தில் நடித்தால் நல்ல நடிகர் என்ற பெயர் எடுத்து விடுவார்கள் . அந்த அளவிற்கு இயக்குனர் பாலா அவர்களை செதுக்கி விடுவார் . மேலும் ஏற்கனவே சூர்யாவை வைத்து நந்தா , பிதாமகன் போன்ற திரைப்படங்களை இயக்கியிருந்தார் பாலா.
இதனை தொடர்ந்து மூன்றாவது முறையாக இவர்கள் இருவரும் வணங்கான் என்ற படத்தில் இணைந்தனர். இந்த படத்தின் படப்பிடிப்பும் பாதி முடிந்த நிலையில் திடீரென இந்த படம் டிராப் செய்யப்பட்டது. ஆனால் என்ன காரணம் என்று தெரியவில்லை . இதனால் வணங்கான் படத்தில்,
சூர்யாவுக்கு பிறகு அருண் விஜய் கமிட்டானார். ஆனால் இவருடைய படத்தில் ஏன்டா நடிக்க வந்தோம் என்று சொல்லும் அளவிற்கு கொடுமைப்படுத்துகிறாராம் இயக்குனர் பாலா . அந்த வகையில் உடம்பை தினமும் ஒர்க்கவுட் செய்து பிட்டாக இருக்கும் அருண் விஜய்யை,
கொஞ்சம் பைப் போட்டால் நன்றாக இருக்கும் என்று கூறுகிறாராம் இயக்குனர் பாலா . அது மட்டுமல்லாமல் படப்பிடிப்பு முடியும் வரை முடிவெட்டக்கூடாது, சேவிங் செய்யக்கூடாது என்று கண்டிஷன் போட்டு அருண் விஜய்யின் மனைவிக்கே அவரை அடையாளம் தெரியாத,
அளவிற்கு மாற்றி விட்டாராம் இயக்குனர் பாலா. இப்படி இயக்குனர் பாலா போட்ட கண்டிஷனுக்கு எல்லாம் அருண் விஜய் செவி சாய்த்தால் கண்டிப்பாக அவருக்கு இந்த திரைப்படம் ஒரு கம்பேக் படமாக அமையும் என்று கூறப்படுகிறது…