April 27, 2024

கலகலப்பு 3 கதையை எழுதி முடித்த சுந்தர் சி ..!! ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவீங்க ..!!

தமிழ் சினிமா உலகில் கடந்த 2012 ஆம் ஆண்டு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விமல், சிவா, ஓவியா, அஞ்சலி ,சந்தானம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் கலகலப்பு . இப்படி வெளியான திரைப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. குறிப்பாக இந்த படத்தின் காமெடியை இப்போது பார்த்தால் கூட அப்படி சிரிப்பு வரும் .  பின்னர் இந்த படத்தை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டு ,

இந்த படத்தின் இரண்டாம் பாகத்தையும் இயக்கியிருந்தார் சுந்தர் சி . இந்த படத்தில் ஜீவா , ஜெய் , சிவா , நிக்கி கல்ராணி , கேத்ரின் தெரசா போன்ற பல பிரபலங்கள் நடித்திருந்தனர் . இந்த திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது.  இப்படி இருக்கும் நிலையில் இந்த படத்தின்,

மூன்றாம் பாகத்துக்கான கதையையும் எழுதி முடித்து விட்டாராம் சுந்தர் சி . அந்த வகையில் தற்போது அரண்மனை 4 படத்தை இயக்கிக் கொண்டு வரும் சுந்தர் சி அடுத்ததாக கலகலப்பு 3 படத்தை இயக்க உள்ளாராம் . இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் கவின் நடிக்க உள்ளதாக,

தகவல் வெளியாகி உள்ளது.  மேலும் கவின் இப்போதுதான் நல்ல நல்ல கதை களங்களை தேர்வு செய்து ரசிகர்களின் மனதில் நல்ல பெயரை வாங்கிக் கொண்டு வருகிறார் . இந்த நேரத்தில் இவருக்கு முழு நேர காமெடி திரைப்படம் சரியாக வருமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *