தமிழ் சினிமா உலகில் கடந்த 2013 ஆம் ஆண்டு இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் எதிர்நீச்சல் . இந்த படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகையாக அறிமுகமானவர் தான் நடிகை சுசா குமார் . இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனின் காதலியாக நடித்திருந்தார் நடிகை சுசா குமார். இந்த படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது .
பின்னர் இந்த படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் வெளியான வீரம், மாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியான மாணிக் ,மற்றும் வெள்ளிக்கிழமை 13ம் தேதி போன்ற படங்களில் நடித்திருந்தார் நடிகை சுசா குமார். ஆனால் இதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக சினிமாவை விட்டே விலகி,
இருக்கிறார் நடிகை சுசா குமார் . இருந்தாலும் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக தான் இருந்து வருகிறார் நடிகை சுசா குமார். அப்படி சமூக வலைத்தளங்களில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு வருகிறார் நடிகை சுசா குமார்.
இதைப் பார்த்த ரசிகர்கள் ஏன் இப்போது எல்லாம் நடிக்க வரவில்லை , என்றும் இவருக்கு யாராவது ஒரு வாய்ப்பு கொடுங்கப்பா என்றும் கூறி வருகின்றனர். இதோ அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்களை நீங்களும் பாருங்க…