காயத்ரி யுவராஜ் ஓர் பிரபலமான தமிழ் தொலைக்காட்சி சீரியல் நடிகை ஆவார். கடந்த 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான தென்றல் என்ற சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானார் காயத்ரி யுவராஜ் . பின்னர் இந்த சீரியலை தொடர்ந்து அழகி ,பொன்னூஞ்சல், களத்து வீடு ,மெல்ல திறந்தது கதவு ,சரவணன் மீனாட்சி 3, அரண்மனை கிளி ,நாம் இருவர் நமக்கு இருவர்,
மீனாட்சி பொண்ணுங்க போன்ற பல சீரியல்களில் நடித்து தமிழ் ரசிகர்களிடையே தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் நடிகை காயத்ரி யுவராஜ் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே யுவராஜ் என்பவரை திருமணம் செய்து கொண்டார் காயத்ரி.
திருமணமான இவர்களுக்கு 12 வயதில் மகன் இருந்தார் . அதன் பிறகு பல வருடங்கள் கழித்து சமீபத்தில் பெண் குழந்தையை பெற்றெடுத்தார் நடிகை காயத்ரி யுவராஜ் . அப்படி மகள் வந்த நேரமோ என்னமோ, தற்போது புது வீட்டில் குடும்பத்துடன் குடியேறி இருக்கிறார் ,
நடிகை காயத்ரி யுவராஜ் . தற்போது அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார் நடிகை காயத்ரி யுவராஜ் . இதை பார்த்த ரசிகர்கள் காயத்ரி யுவராஜுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்…