கடந்த சில வருடங்களுக்கு முன்பு ரசிகர்களின் பேவரைட் நடிகையாக இருந்து வந்தவர் தான் நடிகை ஸ்ரீதிவ்யா. ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த ஸ்ரீதிவ்யா கடந்த 2013 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு கதாநாயகியாக அறிமுகமானார் . இப்படி வெளியான முதல் படத்திலேயே ஒட்டுமொத்த ,
தமிழ் ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் நடிகை ஸ்ரீதிவ்யா . பின்னர் இந்த படத்தை தொடர்ந்து ஜீவா, வெள்ளைக்காரதுரை, காக்கி சட்டை ,ஈட்டி , பெங்களூரு நாட்கள் ,மருது, காஸ்மோரா போன்ற பல திரைப்படங்களில் நடித்திருந்தார் . பின்னர் ஒரு கட்டத்தில் இவருக்கு பட வாய்ப்புகள்,
குறைந்தது . இதனால் கிட்டத்தட்ட ஆறு வருடங்களாக வீட்டிலேயே முடங்கி இருந்த நடிகை ஸ்ரீதிவ்யா தற்போது தமிழில் இரண்டு திரைப்படங்கள் கைவசம் வைத்திருக்கிறாராம் . இப்படி இருக்கும் நிலையில் முப்பது வயதாகும் ஸ்ரீதிவ்யா தன்னுடைய திருமணம் குறித்து மனம் திறந்து உள்ளார்.
அந்த வகையில் பேட்டி ஒன்றில் பேசிய ஸ்ரீ திவ்யாவிடம் உங்களுக்கு எப்போது திருமணம் .? அது காதல் திருமணமா? இல்லை பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமா .? என்று கேள்வி எழுப்பியுள்ளனர் . அதற்கு பதில் அளித்த ஸ்ரீ திவ்யா , என்னுடைய திருமணம் கண்டிப்பாக ,
காதல் திருமணமாகத்தான் இருக்கும். நான் என்னுடைய காதலனை தான் திருமணம் செய்ய போகிறேன் , விரைவில் இது குறித்து அறிவிப்பேன் என்று கூறியிருந்தார் . இதைப் பார்த்த ரசிகர்கள் யார் அந்த அதிர்ஷ்டசாலி என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்…