தற்போது தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் எவ்வளவு உயரத்துக்கு வேண்டுமானாலும் போகலாம் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம் நடிகர் சிவகார்த்திகேயன் தான் . அப்படி ஆரம்பத்தில் ஒரு சாதாரண தொகுப்பாளராக இருந்து வந்த சிவகார்த்திகேயன் இன்று தமிழ் சினிமாவிலேயே,
ஒரு கவனிக்கப்பட வேண்டிய நடிகராக இருந்து வருகிறார் . குறிப்பாக ஆரம்பத்தில் காமெடி படங்களில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்த சிவகார்த்திகேயன் அண்மைக்காலமாக நடிப்புக்கும் , கதைக்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து தான் ஒரு சிறந்த நடிகர் ,
என்று தொடர்ந்து நிரூபித்து வருகிறார் . அந்த வகையில் தற்போது அமரன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன் அடுத்ததாக இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ள புதிய படத்தில் நடித்து வருகிறார் . இப்படி இருக்கும் நிலையில் நேற்று தன்னுடைய 39 ஆவது,
பிறந்த நாளை எஸ் கே 23 பட குழுவினர்களுடன் கோலாகலமாக கொண்டாடி இருந்தார் சிவகார்த்திகேயன் . மேலும் படப்பிடிப்பில் இருந்த அனைவருக்குமே பிரியாணி விருந்து வைத்து அசத்தியிருக்கிறார். தற்போது அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது…