April 30, 2024

இனிமேல் இவர் தான் என்னை காப்பத்தனும் ..!! பிரபல இயக்குனரின் காலில் விழுந்த ஜெயம் ரவி ..!! தொடர் தோல்வியால் இப்படியொரு முடிவா ..??

தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி . ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து ரசிகர்களை கவர்ந்த ஜெயம் ரவி சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்து நல்ல வரவேற்பை பெற்று இருந்தார் . இதன் பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது .

ஆனால் கடந்த சில வருடங்களாக ஜெயம் ரவி சோலோ ஹீரோவாக நடித்த பூமி ,அகிலன் , இறைவன் போன்ற திரைப்படங்கள் தொடர் தோல்வி படங்களாக அமைந்தது . இதனால் ஜெயம் ரவியின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது . இன்னும் சொல்லப் போனால்,

ஜெயம் ரவியின் இறைவன் படத்தை பார்ப்பதற்கு வெறும் ஐந்து பேர் மட்டுமே தியேட்டருக்கு வந்திருந்தார்களாம் . இப்படி நடிக்கும் படங்கள் எல்லாம் தோல்வியை சந்தித்து வருவதால் வேறு வழி இல்லாமல் பிரபல இயக்குனரின் காலில் விழுந்து விட்டாராம் ஜெயம் ரவி . அவர் வேறு யாருமில்லை,

ஜெயம் ரவியின் அண்ணனும்,  இயக்குனருமான மோகன் ராஜா தான் . ஜெயம் ரவி இன்று ஒரு முக்கிய நடிகராக இருப்பதற்கு காரணம் அவருடைய அண்ணன் மோகன் ராஜா தான் . அப்படி இவர்களுடைய கூட்டணியில் வெளியான ஜெயம் ,உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் ,

தனி ஒருவன் போன்ற படங்கள் பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது.  இதனால் தற்போது தனி ஒருவன் 2  படத்தை தம்பிக்காக வேக வேகமாக தயார் செய்து வருகிறாராம் இயக்குனர் மோகன் ராஜா…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *