தமிழ் சினிமா உலகில் ஒரு முக்கியமான நடிகராக இருந்து வருபவர் நடிகர் ஜெயம் ரவி . ஆரம்பத்தில் இருந்தே வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து ரசிகர்களை கவர்ந்த ஜெயம் ரவி சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் அருள்மொழி வர்மனாக நடித்து நல்ல வரவேற்பை பெற்று இருந்தார் . இதன் பிறகு இவருக்கு பல பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது .
ஆனால் கடந்த சில வருடங்களாக ஜெயம் ரவி சோலோ ஹீரோவாக நடித்த பூமி ,அகிலன் , இறைவன் போன்ற திரைப்படங்கள் தொடர் தோல்வி படங்களாக அமைந்தது . இதனால் ஜெயம் ரவியின் மார்க்கெட் கொஞ்சம் கொஞ்சமாக சரிந்து வருகிறது . இன்னும் சொல்லப் போனால்,
ஜெயம் ரவியின் இறைவன் படத்தை பார்ப்பதற்கு வெறும் ஐந்து பேர் மட்டுமே தியேட்டருக்கு வந்திருந்தார்களாம் . இப்படி நடிக்கும் படங்கள் எல்லாம் தோல்வியை சந்தித்து வருவதால் வேறு வழி இல்லாமல் பிரபல இயக்குனரின் காலில் விழுந்து விட்டாராம் ஜெயம் ரவி . அவர் வேறு யாருமில்லை,
ஜெயம் ரவியின் அண்ணனும், இயக்குனருமான மோகன் ராஜா தான் . ஜெயம் ரவி இன்று ஒரு முக்கிய நடிகராக இருப்பதற்கு காரணம் அவருடைய அண்ணன் மோகன் ராஜா தான் . அப்படி இவர்களுடைய கூட்டணியில் வெளியான ஜெயம் ,உனக்கும் எனக்கும், சந்தோஷ் சுப்பிரமணியம் ,
தனி ஒருவன் போன்ற படங்கள் பிரம்மாண்ட வெற்றி படமாக அமைந்தது. இதனால் தற்போது தனி ஒருவன் 2 படத்தை தம்பிக்காக வேக வேகமாக தயார் செய்து வருகிறாராம் இயக்குனர் மோகன் ராஜா…