திறமை இருந்தால் யார் வேண்டுமானாலும் முன்னேறலாம் என்பதற்கு ஒரு உதாரணமாக வாழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன் . ஆரம்பத்தில் மிமிக்ரி கலைஞராக இருந்து வந்த சிவகார்த்திகேயன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளராக தன்னுடைய பயணத்தை தொடங்கினார் . இவருடைய காமெடியான பேச்சு ரசிகர்களை தாண்டி பிரபலங்களையும் வெகுவாக கவர்ந்தது .
இதனால் இவருக்கு சினிமா வாய்ப்பும் வந்தது. அந்த வகையில் மெரீனா என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான சிவகார்த்திகேயன் மனம் கொத்திப் பறவை என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் . பின்னர் குறிப்பிட்ட காலகட்டத்திலேயே பல சூப்பர் ஹிட் படங்களில்,
நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துக் கொண்டார் சிவகார்த்திகேயன் . துவும் அம்மைக்காலமாக இவர் கதைக்கும் , கதாபாத்திரத்திற்கும் முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து தான் ஒரு திறமையான நடிகர் என்று நிரூபித்து வருகிறார் .
தற்போது இவர் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள அமரன் என்ற படத்தில் நடித்து முடித்து இருக்கிறார் . இதை தொடர்ந்து இயக்குனர் ஏ ஆர் முருகதாஸ் இயக்க உள்ள புதிய படத்தில் நடிக்க இருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன்.
இப்படி இருக்கும் நிலையில் இன்று 39 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் சிவகார்த்திகேயன் நடிக்க வருவதற்கு முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தை கலக்கிக்கொண்டு வருகிறது …