90 களில் தமிழ் சினிமாவை கலக்கி வந்த முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் நடிகை சுகன்யா. கடந்த 1991 ஆம் ஆண்டு இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் நடிகையாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார் நடிகை சுகன்யா. பின்னர் இந்த படத்தை தொடர்ந்து சின்ன கவுண்டர் ,திருமதி பழனிசாமி ,செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல் ,மகாநதி ,இந்தியன்,
போன்ற பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்திருந்தார் நடிகை சுகன்யா. மேலும் இவர் தமிழ் மொழி மட்டுமல்லாமல் தெலுங்கு ,மலையாளம், மற்றும் கன்னட மொழி படங்களிலும் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது . இப்படி கதாநாயகியாக கலக்கிக்கொண்டு வந்த சுகன்யா திருமணமான பிறகு ,
தன்னுடைய வயதுக்கேற்ற கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி கடைசியாக இயக்குனர் சேரன் இயக்கத்தில் வெளியான திருமணம் என்ற படத்தில் நடித்திருந்த சுகன்யா கடந்த நான்கு வருடங்களாக எந்த ஒரு படங்களிலும் நடிக்காமல் இருந்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில்,
திடீரென தொழிலையே மாற்றியுள்ளார் நடிகை சுகன்யா . அந்த வகையில் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் டி என் ஏ என்ற படத்தில் பாடலாசிரியராக அறிமுகமாக உள்ளாராம் நடிகை சுகன்யா. குறிப்பாக இவர்தான் பாடல் எழுத வேண்டும் என்று கோரிக்கை வைத்தாராம் அந்த படத்தின் ,
இசையமைப்பாளர். அப்படி மட்டும் இவர் எழுதிய பாடல் ஹிட்டானால் தமிழ் சினிமாவிலும் நடிகை சுகன்யா பாடலாசிரியராக கலக்குவார் என்று கூறப்படுகிறது . இதைப் பார்த்த ரசிகர்கள் நடிகை சுகன்யாவுக்குள் இப்படி ஒரு திறமையா என்று கூறி வருகின்றனர்…