ஜோதிகா ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார். அஜித் நடிப்பில் வெளியான வாலி என்ற படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய ஜோதிகா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறினார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே சூர்யா மீது காதல் வயப்பட்டார் நடிகை ஜோதிகா . பின்னர் இருவரும் ஐந்து வருடமாக காதலித்து வந்த நிலையில்,
கடந்த 2௦௦6 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . மேலும் திருமணத்துக்கு பிறகு நடிப்பதையே நிறுத்திய ஜோதிகா பின்னர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில்,
அண்மைக்காலமாகவே ஜோதிகாவை நடிக்க வேண்டாம் என்று சிவகுமார் சொல்லியதாகவும், அதனால் தான் ஜோதிகாவும் , சூர்யாவும் மும்பையில் செட்டில் ஆனதாகவும் தகவல் வெளியானது . இது குறித்து பதில் அளித்த ஜோதிகா , எனக்கு வீட்டில் உறுதுணையாக இருப்பதே ,
என் அப்பா சிவகுமார் தான் . குறிப்பாக படப்பிடிப்பிற்கு செல்லும்போது குடும்பம் , குழந்தைகளை மறந்து வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று என்னிடம் கூறினார் . மேலும் கொரோனா காலகட்டத்தில் என்னுடைய பெற்றோர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.
அதனால்தான் தற்போது அவர்களைப் பார்த்துக் கொள்வதற்காக முன்பயில் குடியேறினோம் , வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியிருந்தார் ஜோதிகா . தற்போது சூர்யா ,ஜோதிகா ,சிவகுமார் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது …