April 30, 2024

நடிக்க போறமாதிரி இருந்தா ..!! குடும்பத்தை மறந்து விடு ..!! சிவகுமார் சொல்லியதை அப்படியே சொல்லிய ஜோதிகா ..!!

ஜோதிகா ஒரு பிரபலமான தமிழ் திரைப்பட நடிகை ஆவார். அஜித் நடிப்பில் வெளியான வாலி என்ற படத்தின் மூலம் திரைப்பயணத்தை தொடங்கிய ஜோதிகா குறிப்பிட்ட காலகட்டத்திலேயே ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக மாறினார் . இப்படி நடித்துக் கொண்டிருக்கும் போதே சூர்யா மீது காதல் வயப்பட்டார் நடிகை ஜோதிகா . பின்னர் இருவரும் ஐந்து வருடமாக காதலித்து வந்த நிலையில்,

கடந்த 2௦௦6 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . மேலும் திருமணத்துக்கு பிறகு நடிப்பதையே நிறுத்திய ஜோதிகா பின்னர் 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார்.  இப்படி இருக்கும் நிலையில்,

அண்மைக்காலமாகவே ஜோதிகாவை நடிக்க வேண்டாம் என்று சிவகுமார் சொல்லியதாகவும்,  அதனால் தான் ஜோதிகாவும் ,  சூர்யாவும்  மும்பையில் செட்டில் ஆனதாகவும் தகவல் வெளியானது . இது குறித்து பதில் அளித்த ஜோதிகா , எனக்கு வீட்டில் உறுதுணையாக இருப்பதே ,

என் அப்பா சிவகுமார் தான் . குறிப்பாக படப்பிடிப்பிற்கு செல்லும்போது குடும்பம் , குழந்தைகளை மறந்து வேலையில் கவனம் செலுத்த வேண்டும் என்று என்னிடம் கூறினார் . மேலும் கொரோனா காலகட்டத்தில் என்னுடைய பெற்றோர்கள் பெரிய அளவில் பாதிக்கப்பட்டனர்.

அதனால்தான் தற்போது அவர்களைப் பார்த்துக் கொள்வதற்காக முன்பயில் குடியேறினோம் , வேறு எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறியிருந்தார் ஜோதிகா . தற்போது சூர்யா ,ஜோதிகா ,சிவகுமார் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது …

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *