தமிழ் சினிமாவை கலக்கி வரும் நட்சத்திர ஜோடிகளில் ஒருவர்கள்தான் சூர்யா மற்றும் ஜோதிகா. கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் இருவரும் ஒன்றாக நடித்திருந்தனர். பின்னர் இந்த படத்தை தொடர்ந்து உயிரிலே கலந்தது, காக்க காக்க, பேரழகன் ,மாயாவி ,சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களில் நடித்திருந்தனர். அப்போதிலிருந்து இருவருக்கும் இடையே ,
காதல் ஏற்பட்டுள்ளது . பின்னர் கடந்த 2௦௦6 ஆம் ஆண்டு பெற்றோர்கள் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . திருமணமான இவர்களுக்கு ஒரு மகள் , ஒரு மகன் உள்ளனர் . மேலும் திருமணத்துக்குப் பிறகு நடிப்பதையே நிறுத்திய ஜோதிகா பல வருடங்கள் ,
இடைவேளைக்கு பிறகு 36 வயதினிலே என்ற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்திருந்தார் . இதை அடுத்து தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதைக்களங்களை தேர்வு செய்து நடித்துக் கொண்டு வருகிறார் நடிகை ஜோதிகா. மேலும் சூர்யாவுக்கும் ,
ஜோதிகாவுக்கும் திருமணமாகி கிட்டதட்ட 17 வருடங்கள் ஆகியும் கூட இருவருக்கும் இடையே இருக்கும் காதல் இன்னும் குறையவில்லை என்று தான் சொல்ல வேண்டும் . அப்படி ஒரு நல்ல நடிகையாக பார்த்த ஜோதிகா நல்ல ஓவியரும் ஆவார் . அந்த வகையில் சூர்யாவின் ,
புகைப்படத்தை மிகவும் தத்ரூபமாக வரைந்திருக்கிறார் நடிகை ஜோதிகா . இதை பார்த்த ரசிகர்கள் ஜோதிகாவுக்கு இப்படி ஒரு திறமையா.? இத்தனை நாள் இது தெரியாம போச்சே என்று கூறி வருகின்றனர்…