April 25, 2024

குடும்பத்தையே வெளியில் காட்டாத கவுண்டமணி ..!! காரணத்தை கேட்டா ஆச்சிரியப்படுவீங்க ..!!

80 , 90 களில் ஒரு தவிர்க்க முடியாத காமெடி நடிகராக வலம் வந்தவர் கவுண்டமணி.  சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த கவுண்டமணி ஒரு கட்டத்தில் முன்னணி காமெடி நடிகராக மாறினார் . குறிப்பாக இவரும் செந்திலும் இணைந்து நடித்த காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்து வருகிறது . அதுவும் ஒரு கட்டத்தில் இவர்கள் இல்லாத படங்களை கிடையாது என்று சொல்லும் அளவிற்கு ,

பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து வந்தார்கள் கவுண்டமணி -செந்தில் . மேலும் தன்னுடைய கவுண்டர் வசனங்கள் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் கவுண்டமணி . இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் நிஜத்திலும் கொஞ்சம் நக்கல் பிடித்தவர் தான் . குறிப்பாக பல முன்னணி,

நடிகர்களுடன் இணைந்து நடித்த கவுண்டமணி ஒரு கட்டத்தில் சினிமாவை விட்டு விலகினார்.  இதை அடுத்து 80 வயதுக்கு மேல் ஆகியும் தற்போது பழனிச்சாமி வாத்தியார் என்ற படத்தில் நடித்து விடுவதாக கூறப்படுகிறது . மேலும் நடிகர் கவுண்டமணியை தாண்டி அவருடைய குடும்பத்தை,

பற்றி யாருக்கும் எதுவுமே தெரியாது . அதற்கு இப்படி ஒரு காரணம் இருக்கிறதாம்.  அந்த வகையில் கவுண்டமணியை பொறுத்தவரை மக்கள் இவரை தெரிந்து கொண்டால் போதுமாம் . அவருடைய குடும்பத்தை தெரிந்து கொண்டு மக்கள் என்ன செய்யப் போகிறார்கள் என்ற,

கொள்கை உடையவராம்  கவுண்டமணி . முக்கியமாக மக்களின் நேரத்தை எப்போதும் வீணடிக்க வேண்டாம் என்று நினைப்பவர் கவுண்டமணி . இதனால்தான் தன்னுடைய குடும்பத்தை மீடியா பக்கமே காட்டாமல் இருந்து வந்தாராம் கவுண்டமணி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *