April 22, 2024

காதல் திருமணம் செய்து சந்தோசமாக வாழ்ந்து வரும் சினிமா பிரபலங்கள் ..!! இதில் உங்களுக்கு பிடித்த ஜோடி எது ..??

தமிழ் சினிமாவில் இருக்கும் எத்தனையோ நடிகர் நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள் தான்.  அப்படி ஊர் கண்ணே படும் அளவிற்கு சந்தோசமாக வாழ்ந்து வரும் சினிமா பிரபலங்களின் லிஸ்ட் வெளியாகி உள்ளது.  இதில் முதலாவதாக உள்ளவர்கள் சுந்தர் சி மற்றும் குஷ்பூ . அந்த வகையில் குஷ்பூவை வைத்து பல திரைப்படங்களை இயக்கியிருந்தார் சுந்தர் சி . அப்போது இருவருக்கும் இடையே,

காதல் மலர்ந்து பின்னர் திருமணமும் செய்து கொண்டனர்.  இவர்களை தொடர்ந்து அஜித் – ஷாலினி .  அமர்க்களம் படத்தின் படப்பிடிப்பின் போது இருவருக்கும் இடையே காதல் மலர்ந்திருக்கிறது.  பின்னர் இருவரும் திருமணமும் செய்து கொண்டனர்.  இவர்களை தொடர்ந்து சூர்யா -ஜோதிகா.

இவர்கள் இருவரின் காதலுக்கு பல எதிர்ப்புகள் வந்தும் கூட ஐந்து வருடம் காத்திருந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . இவர்களைத் தொடர்ந்து சரத்குமார்- ராதிகா.  இருவரும் ஏற்கனவே திருமணம் ஆனவர்கள் தான் . பின்னர் இவர்களுக்கிடையே காதல் மலர்ந்து ,

இருவரும் திருமணம் செய்து கொண்டனர் . இவர்களைத் தொடர்ந்து நடிகர் அர்ஜுன்.  இவர் நடிகை நிவேதிதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இவர்களைத் தொடர்ந்து தொடர்ந்து ஒரு முக்கிய ஜோடியாக இருந்து வருபவர்கள் பிரசன்னா மற்றும் சினேகா .

இவர்களைத் தொடர்ந்து  அட்லீ , ஆர்யா , ஆதி , அசோக் செல்வன் போன்ற பல பிரபலங்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டு இன்று நன்றாக வாழ்ந்து வருகின்றனர் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *